Skip to main content

140 ஆண்டுகள் பாரம்பரிய பள்ளியை பாதுகாக்க மக்கள் வேண்டுகோள்!

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

புதுச்சேரி மிஷன் வீதியில்  வரலாற்று சிறப்புமிக்க COLLÈGE CALVÉ 'கொலேழ் கல்வே' என்று பிரஞ்சு மொழியிலும் 'கலவைக் கல்லூரி' என்று தமிழிலும் அழைக்கப்படும் 140 ஆண்டுகளை கடந்த பள்ளி உள்ளது.  கலவை சுப்பராய செட்டியார் என்ற ஒரு தனி மனிதர் புதுச்சேரி மக்களுக்கு அளித்தப் பெருங் கொடை. 

 

ஆயிரக்கணக்கான புதுவை வாழ் மாணவ மக்கள் கல்வி கற்ற COLLÈGE CALVÉ கலவைக் கல்லூரி 1877 ஆம் ஆண்டு முதல் இயங்குகின்றது. இதன் முதல் தலைமை ஆசிரியர் ஒரு கிருத்துவ பாதிரியார் ஆவார். இந்த பள்ளியில் பயின்றவர்கள் உலகம் முழுக்கப் பரவி வாழ்கின்றார்கள். பாவேந்தர் பாரதிதாசன் இந்த பள்ளியில் பயின்றவர். 1908 ஆம் அண்டு இந்த பள்ளியில் தமிழ்-பிரவே தேர்வினை எழுதி வெற்றி பெற்றவர். தமிழ் - பிரவே (BREVET DE LANGUE INDIGÈNE – B.I) , பின்னாட்களில் பிரஞ்சு - பிரவே ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற இப்பள்ளியின் மாணவர்கள் பிரஞ்சு புதுச்சேரி அரசுப் பணிகளில் அமர்ந்தனர். 

 

இப்பொழுது வாழும் அரசியல் சார்புடைய பலர் தனியார் பள்ளிகள் வைத்திருக்கின்றார்கள். அப்பொழுது தனியார் பலர் அரசுக்கென பள்ளிகள் அமைத்திருக்கின்றார்கள். பல கோடி மதிப்புள்ள இந்த கல்விக் கோயில் புதுவை அரசால்  தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாற்றுகின்றனர். 140 ஆண்டுகால புதுச்சேரி மக்களின் வரலாறு, வாழ்வியல் எல்லாம் கலந்த இந்த பள்ளி இன்னும் தொடர்ந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் இந்த மண்ணிற்குப் பயன் படவேண்டும் என்றும், இந்தோ பிரஞ்சு மரபு  கட்டிட கலையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் இப்பள்ளியை  பராமரிக்கவும்,  புனரமைக்கவும்  மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.