Skip to main content

ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைக்கு உணவு, உடை வழங்கிய எம்.எல்.ஏ.!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

பாராளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் 40 தொகுதிகளையும் கழக உடன்பிறப்புகள் வெற்றிபெற்றுக் கொடுத்தால் அதை எனது பிறந்தநாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி பிறந்தநாளை கொண்டாடவில்லை ஸ்டாலின்.

 

இருந்தாலும் அங்கங்கே உள்ள உடன்பிறப்புக்கள் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் முடிந்த அளவுக்கு ஏழைபாழைகளுக்கு உதவி செய்தும் வருகிறார்கள்.

 

stalin birthday celebration in dinducul

 

அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியத்தில் இருக்கும் கீரனூர் குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகளையும்,உடைகளையும் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கினார். அதைக்கண்டு குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பூரித்துப் போய் விட்டனர்.

 

stalin birthday celebration in dinducul

 

இதில் மாவட்ட துணைச் செயலாளர் இராஜாமணி, தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள்   காதர்பாட்சா, வெங்கிடுசாமி, ஒன்றிய பொருளாளர் நாச்சிமுத்து , மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சின்னசாமி, கீரனூர் பேரூர் பொறுப்பாளர் கருப்புசாமி, கீரனூர் உறுமன், பெரிச்சிபாளையம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சாமிதுரை,  தும்பலப்பட்டி தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட கலை இலக்கியபகுத்தறிவு பேரவை அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிவேல், தொப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் ராமராஜ், மரிச்சிலம்பு ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன்,  மேல்கரைபட்டி ஊராட்சி செயலாளர் கருப்புச்சாமி, மிடாப்பாடி ஊராட்சி செயலாளர் ராமசாமி, புஷ்பத்தூர் ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி, தாளையூத்து ஊராட்சி செயலாளர் தங்கவேல், தும்பலப்பட்டி ஊராட்சி செயலாளர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்லத்துரை, கீரனூர் பேரூர் மாணவரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.