Skip to main content

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
14 Tamil Nadu fishermen issue

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் காரை நகர் கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்