Skip to main content

வீடு புகுந்து 11 வயது சிறுமி கடத்தல்... 7 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

11-year-old girl Incident in namakkal

 

நாமக்கல் அருகே 11 வயது சிறுமி வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சரவணன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். சரவணன் பணிக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மகளும் நேற்று மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் மனைவி கவுசல்யா மற்றும் அவரது 11 வயது மகளை மிரட்டி நகைகளைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.

 

இருவரையும் கட்டிப்போட்ட அந்த மர்ம நபர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர்கள் குழந்தையை விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் தயார் செய்து வைக்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து சரவணன்-கௌசல்யா போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைத்துள்ளனர். 11 வயது சிறுமி வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்