Published on 13/07/2020 | Edited on 13/07/2020

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் காரணமாக ஜூலை 15 ஆம் தேதி வரை பொது போக்குவரத்து இருக்காது என தமிழக அரசு சார்பில் கடந்த மாதம், தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூலை 31ம் தேதி வரை பொது போக்குவரத்து நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால் ஜூலை 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.