Skip to main content

'கொடுத்தால் தானே போட முடியும்...' - மாஸ்க் இல்லாமல் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்! 

Published on 26/03/2020 | Edited on 27/03/2020

 

 

 


உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது, மத்திய மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் திருவண்ணாமலை நகராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தீவிரமாகச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், சாலைகள், மார்க்கெட் பகுதிகள் போன்றவற்றிலும், அரசு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது என சுமார் 50க்கும் மேற்பட்ட நகரத் தூய்மை பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

thiruvannamalai


இதேபோல் கிரிவலப்பாதை அத்தியந்தல், ஆனாய்பிறந்தான், கோசாலை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகளைச் சேர்ந்த மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் தொழிலாளர்கள் திருவண்ணாமலையில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.




இப்படி தூய்மை படுத்தும் பணியில் உள்ளவர்களுக்கு கை, கால்களுக்கு உரை, முகத்துக்கு மாஸ் போன்ற அடிப்படையானவற்றைக்  கூட அதிகாரிகள் வழங்காமல் அவர்களிடம் வேலை வாங்குகிறார்கள். நகர பகுதிகளில் ஒரே மாஸ்கை 3 நாட்களாக பணியாளர்கள்பயன்படுத்திவருகிறார்கள். கிராமபுறத்தில் தூய்மை பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு அதைக்கூட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வழங்கவில்லை.

 

ஏன் மாஸ்க் போடவில்லை என்று பணியாளர்களிடம் கேட்ட போது, கொடுத்தால் தானே போட முடியும் என்கிறார்கள் அந்த அப்பாவிகள்.  இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "இருந்ததை ஓரளவு தந்து சமாளித்தோம். இப்போது தருவதற்கு ஒன்றுமில்லை. அரசாங்கம் எங்களுக்கு வழங்கினால் தானே நாங்கள் பணியாளர்களுக்குத் தர முடியும். வெளியில் வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள். எந்த மருந்துக்கடையில் கிடைக்கிறது. எங்கேயாவது கிடைத்தால் அதுவும் 5 ரூபாய் மாஸ்க் 50 ரூபாய் என விலை வைத்து விற்கிறார்கள். என்ன செய்வது, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னாலும் எதுவும் நடப்பதில்லை" என்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.