108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு உயர்நீதிமன்றம் தடை!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக, 20 சதவீதம் தீபாவளி போனஸ், ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.17-ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. மேலும் தடையை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.