Skip to main content

“தமிழக அரசு என்பது யாருக்கானது?” - தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

whose is the taminadu goverment velmurugan questioned

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அவர்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். நேற்று (19.02.2021) தலைமைச் செயலகத்தின் முன்பு போராட முயன்ற அரசு ஊழியர்களை முறையற்ற வழியில் காவல் துறை கையாண்டதும், அவர்களைத் தாக்கி கூட்டத்தைக் களைத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனைக் கண்டிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது, “மண்ணின் மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். தமிழக அரசு என்பது யாருக்கானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்புகிறது.

 

whose is the taminadu goverment velmurugan questioned

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகம் முன்பு, திரண்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை ஏற்க தயாராக இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது காவல்துறையை ஏவி விட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசின் அடக்குமுறைக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

whose is the taminadu goverment velmurugan questioned

 

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களை அழைத்துக் கூட பேச முன் வராதது, ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது தடியடி நடத்தி, காயத்தை ஏற்படுத்திய காவல்துறைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

 

மண்ணின் மக்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு என்பது யாருக்கானது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, போராடும் அரசு ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களது நியாயமான கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி’ - முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'Good news for govt employees' - CM M.K.Stalin action announcement

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வகையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வேலை நிறுத்தம்; வருவாய்த்துறை அலுவலகத்தில் தேங்கிய பணிகள்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Office work has also been completely disrupted due to struggle by revenue dept officials.
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையின் அலுவலர்கள் மொத்தம் 14 ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  முதல்கட்டமாக கடந்த பிப்.13ம் தேதி ஒட்டுமொத்த ஊழியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டாம் கட்ட போராட்டமாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஊழியர்கள் நேற்று(26.2.2024) வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றாம் கட்ட போராட்டமாக இன்று (27.2.2024) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் மொத்தம் 400 ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் வாயிலாக பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடனே வெளியிட வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். முதுநிலை நிர்யணம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக தெளிவுரை வழங்கிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனே வெளியிட வேண்டும். பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இன்று முதல் தொடங்கிய காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக பிறப்பு, இறப்பு, வாரிசு, விதவை உள்ளிட்ட அனைத்து வகையான சான்றுகள் வழங்கும் பணிகளும், தேர்தல் மற்றும் அலுவலகப் பணிகளும் முற்றிலும் தடைபட்டுள்ளது.