Skip to main content

பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது: சி.பி.எம். வாசுகி கண்டனம்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
U. Vasuki CPI(M)



நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகர சி.பி.எம். கட்சியின் சார்பில், நகரின் தேரடி திடலில் அக்.12ல் அக்கட்சியின் தொண்டர்கள் திரள ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபி.எம். வட்டார செயலாளர் அசோக் ராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய கமிட்டி உறுப்பினரான வாசுகி கலந்து கொண்டார்.
 

ஆர்ப்பாட்டத்தின் போது வாசுகி பேசியதாவது. ஆங்கில வழிக்கல்வி முறையில் தேர்வு எழுத வற்புறுத்தும், அனுமதிக்கிற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு விட்டன.  அதனை ரத்து செய்யக் கோரியும் தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தியும் பல்கலைகழகம் முன்பு போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியிருக்கிறார்கள். அதில் மாணவர்கள் பலர் காயமுற்றிருக்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது. மேலும் 10 மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும். நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டது, பத்திரிக்கை சுதந்திரம், பேச்சுரிமை கருத்துரிமை பறிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. கண்டனத்திற்குரியது என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையே உறுதிமொழியாக ஏற்றுள்ளார்'' - உ.வாசுகி பேச்சு

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

"The governor has taken an oath to speak untruths"- U. Vasuki speech

 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ‘வள்ளலார் - 200’ சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பேசினார்.

 

அவர் பேசுகையில், ''இன்றைய அரசியல் சூழலில் எவ்வாறு தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தக் கருத்தரங்கம் அமைந்துள்ளது. தமிழக ஆளுநர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதையும், நடப்பதையும், உறுதிமொழி எடுத்துச் செயல்படுத்தி வருகிறார். வள்ளலார் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவர். சனாதனத்திற்கு எதிரான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தவர். இவரை சனாதனத்தின் உச்சம் என ஆளுநர் ரவி பொய்யாகப் பேசியுள்ளார். ஒன்றியத்தில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள்தான் ஆட்சியில் உள்ளனர்.

 

வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்கம்தான் உண்மையான வாழ்க்கைநெறியென மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்தார். ஆனால், பாஜகவினரின் கருத்துகள், செயல்பாடுகள் வள்ளலாருக்கு எதிராகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. மோடியின் ஆட்சியில் பசியையும் வறுமையும் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பசி, வறுமை கணக்கெடுப்பில் 127 உலக நாடுகளில் 107வது இடத்தில் இந்தியா உள்ளது. சாதி, சமயம், மூடநம்பிக்கை மதங்களை வள்ளலார் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார். ஆனால், மோடி அரசு இவற்றை மூலதனமாகக் கொண்டு செயல்படுகிறது. 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வள்ளலார் வகுத்துள்ள கொள்கைகள், பாதைகள், தத்துவத்திற்கு ஏற்ப தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டிருக்கிறது. வள்ளலார் சொல்வது போல் மதவெறி அரசியலை நிராகரிப்பதில் முன்வரிசையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சனாதன எதிர்ப்பில் வலுவாக உள்ளது. வள்ளலார் சொல்லுகிற மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அன்பு செலுத்தப்பட வேண்டும், அனைத்து மக்களும் எந்த சாதி, மதமாக இருந்தாலும் அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக கொள்கை வகுத்து போராட்டக்களத்தில் நிற்கக்கூடிய கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது.

 

மேலும், பெண்களும் குழந்தைகளும் வன்முறைகளால் பாதிக்கப்படும்போது முதலில் களத்தில் இறங்குவது மார்க்சிஸ்ட் கட்சி தான். அதனால்தான் வள்ளலார் விட்டுச்சென்ற இப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க நெறிமுறைகளை பொதுவுடைமை தத்துவத்தோடு இணைத்து தமிழகத்தில் அப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிற இயக்கமாக செங்கொடி இயக்கம் இருக்கிறது” எனப் பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு, முன்னாள் செயற்குழு உறுப்பினர் மூசா, செயற்குழு உறுப்பினர் தேன்மொழி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பிரகாஷ், வாஞ்சிநாதன், விஜய், செல்லையா, மனோகர், ஸ்டாலின், ஆழ்வார், ஜெயசித்ரா மற்றும்  நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 


 

Next Story

குஷ்பு கொடுத்த பதிலும் மாதர் சங்க வாசுகியின் கேள்வியும்!

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

The answer given by Khushbu; Mathar Sangha Vasuki's question too

 

அண்மையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்புவை அவதூறாக பேசியதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிப்படை உறுப்பினர் உட்பட கட்சியின் பதவியில் இருந்து திமுக நீக்கியது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது குறித்தும் குஷ்பு செய்தியாளர் சந்திப்பு குறித்தும் ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகியை சந்தித்து பேட்டி கண்டோம். அதில் ஒரு பகுதி: 

 

பாஜகவில் இருக்கக்கூடிய டெய்ஸிக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் நடக்கும் போது குஷ்பு அமைதியாக இருந்ததற்கு காரணம் என்ன?

 

எல்லா விஷயத்திற்கும் குஷ்பு தலையிட வேண்டும் என அவரை பெரிய ஆளாக ஆக்க வேண்டிய அவசியம் இல்லை. கலாஷேத்ரா விவகாரத்தில் நாங்கள் கேள்வி எழுப்பியபோது, 'என்னை பற்றி விமர்சனம் செய்தால் தான் மாதர் சங்கம் லைம் லைட்டுக்கு வரும்’ என எங்களது பொதுச்செயலாளருக்கு பதில் அனுப்பியிருந்தார் குஷ்பு. இதற்கு பதில் அளித்த நான், ஜனநாயக மாதர் சங்கத்துக்கு அந்த புகழெல்லாம் தேவை இல்லை. இத்தனை வருடங்களில் அந்த புகழை எதிர்பார்த்து  நாங்கள் காவல் துறையிடமும், சமூக விரோதிகளிடமும் மோதவில்லை. உங்களை பற்றி அதிகமாக யோசிக்கிறீர்கள் என்று தெரிவித்திருந்தேன்.

 

ஆனால், ஆணைய உறுப்பினர் என்ற முறையில் முக்கியமான விஷயங்களில் குஷ்பு தலையிட வேண்டும். குற்றவாளிகள் பலரும் அவருடைய கட்சியில் இருப்பதன் பின்னணியில் பாஜக உறுப்பினராக இல்லாமல் மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து அவருடைய கட்சி தலைமையோடு கூட குஷ்பு மோத வேண்டிய அவசியம் ஏற்படும். அவர் அதை செய்ய வேண்டும் என்பதை தான் நாங்கள் கூறுகின்றோம்.

 

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராடிக் கொண்டிருந்தபோது குஷ்பு அமைதியாக இருந்ததன் காரணம் என்ன ?

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் திமுகவில் இருந்தால் பாஜக தரப்பினர் தேடித் தேடி அதில் தலையிடுவார்கள். சமீபத்தில் கூட மைக்கல்பட்டியில் பள்ளி சிறுமி மரணம் அடைந்த விஷயத்தில் குழந்தை உரிமைகள் ஆணையம் உடனே தேடி வந்து விசாரித்தார்கள். அதில் காட்டிய கவனம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளிலும் காட்ட வேண்டும். காஷ்மீர் கத்துவாவில் நடந்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கவனம் காட்டியது இல்லை. அதே போல் உத்தரப்பிரதேசம் உன்னாவ் சம்பவம் உட்பட அந்த மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் பல நிகழ்ந்து உள்ளன. ஆனால், மகளிர் ஆணையம் அங்கு என்ன கவனம் காட்டியது என்ற கேள்வி எழுகிறது.

 

பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நோக்கத்தை வைத்து கொண்டு பார்ப்பது, எதிர்க்கட்சியினர் குற்றத்தில் சம்பந்தப்பட்டால் உடனே அதில் தலையிடுவது மற்றும் மைக்கல்பட்டி போன்ற மத சம்பந்தப்பட்ட விஷயத்தில் தலையிடுவது போன்று குறிப்பிட்ட விஷயத்தில் தான் தலையிடுகிறார்கள். மல்யுத்த வீராங்கனைகள் விஷயத்தில், நீதிமன்றத்தில் விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறதே தவிர அங்கு போராடும் வீராங்கனைகளுக்கு நேரில் சென்று ஆதரவு கொடுப்பதற்கு எந்த தடையும் கிடையாது. சட்டம் எங்களுக்கு தெரியவில்லையா அல்லது குஷ்புவுக்கு தெரியவில்லையா என்று தான் நான் கேட்கிறேன்.

 

உங்களுடைய கணவருடைய  சொத்தை பாதுகாப்பதற்குத்தான் கட்சி மாறுகிறீர்களா என்று குஷ்புவிடம் ஒருவர் கேட்டபோது, உங்கள் வீட்டுப் பெண்களை வைத்துத்தான் நீங்கள் வியாபாரம் நடத்துகிறீர்களா என்று கேட்கிறார் குஷ்பு. பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய குஷ்பு பிறர் வீட்டுப் பெண்களை இழிவாகப் பேசுகிறாரே?

 

எல்லோருக்கும் அளவுகோல் என்பது சமம் தான். பெண்களை பாலியல் ரீதியாக அவதூறுகள் செய்யக்கூடாது என்று சொன்னால் அது அனைவருக்கும் சமமான ஒரே நிலைப்பாடுதான். குஷ்பு அதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரியங்காவை சகோதரி என்று சொன்னதற்கு தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய ரேகா ஷர்மா 'ரெண்டு பேருக்கும் ஒரே அப்பாவா' என்று இழிவாகப் பேசுகிறார். ஒரு ஆணையத்தின் தலைவராக இருக்கக் கூடியவரே இப்படி பேசினால் மற்றவர்கள் எப்படி பேசுவார்கள்.