Skip to main content

பிள்ளைகளே பெற்றோரை உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடச்சொல்கிறார்கள்! - வைகோ பேச்சு

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியையும். நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரான சொவுந்திர பாண்டியனையும் ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்து பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
 

vaiko

 

இறுதியாக திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோவுடன் துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமியும் கலந்து கொண்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டி போடும் வேலுச்சாமிக்கு பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்
.


அதன் பின் தேசிய கழக துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமியோ, “இன்னும் 48 மணி நேரத்திற்கு கடுமையாக உழைத்தீர்கள் என்றால் மத்தியில் ராகுல் காந்தியையும் மாநிலத்தில் ஸ்டாலினையும் ஆட்சியில் அமரவைத்துவிடலாம்.திமுகவிற்காக இரவு பகல் பாராமல் எந்த ஒரு எதிர்பார்ப்பையும், சலுகையும் எதிர்பார்க்காமல் அண்ணன் வைகோ  உழைத்து வருகிறார். அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.


.   

இறுதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் போது, “பாராளுமன்றத் தேர்தல்  சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்படும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளும் போதெல்லாம் முப்படைகளை காட்டி வாக்கு சேகரிக்கிறார் அவர்கள் சிந்திய ரத்தம் இந்தியாவில் வாழும் 150 கோடி மக்களுக்கு சொந்தம்.  அவர்கள் சிந்திய ரத்தம் நாட்டுக்கானது அதை எந்த அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது  மக்களை காக்க ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு ஓட்டு கேட்பது வெட்கமான விஷயம். இப்படிப்பட்ட மோடியின் கூட்டத்தை தூக்கி எறிய வேண்டும் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்தபோது பிரான்ஸ் நாட்டில்  126 ரபேல் போர் விமானங்கள் ரூ. 526 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதிலும் 18 விமானங்களை மட்டும் பிரான்ஸ் நாட்டில் வாங்கிக்கொண்டு மீதியுள்ள விமானங்களை பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அடுத்து ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டு போர் விமானம் தயாரிப்பது குறித்து எந்த வித அனுபவமும் இல்லாத அனில் அம்பானியை காஞ்சிக்கு அழைத்துச் சென்று ரூ. 1670 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் அவர்கள் செய்த ஊழலை ஒரு ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஊழல் நிறைந்த கட்சியாக உள்ளது. அதனால்  அக்கா தங்கை மார்களே வரக்கூடிய தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். உங்கள் நகைகளான ஒருபவுன், இரண்டு பவுன், மூன்றுபவுன் என வங்கிகளில் அடகு  வைத்து கடன் வாங்கி இருப்பீர்கள், அந்த கடனை எல்லாம் ஸ்டாலின் ரத்து செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். 

 

அதுபோல் மாதம் மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வீடு தேடி கொடுக்க இருக்கிறார்கள் அதனால், மக்கள் சிந்தித்து வாக்களியுங்கள். தற்பொழுது வீட்டில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் தங்கள் பெற்றோர்களை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் நான் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்றால் நீட் தேர்வ் ரத்து, கல்வி கடன் ரத்து செய்ய கூடிய  உதய
சூரியனுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரான வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்று கூறினார்.

 

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், திமுக நகரச் செயலாளர் ராஜப்பா, முன்னாள் நகர செயலாளர் பசீர் அகமது மற்றும் கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களுடன் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.