Skip to main content

தஞ்சை குடமுழுக்கு விழாவில் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை.... கைது செய்யப்பட்ட கௌதமன் பேட்டி...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குனருமான கௌதமன் மற்றும் அவருடன் வருகை தந்த இருவரையும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில்  போலீசார் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கௌதமன் கைது செய்யப்பட்டார்.
 

- ulundurpet -



 

அப்போது கௌதமன் கூறுகையில், தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் மதுரை கிளையின் உத்தரவை மீறி தமிழ் மரபுகளை மறைத்துள்ள இந்து அறநிலை துறையை கண்டிக்கிறோம். தமிழில் குடமுழுக்கு செய்கிறார்களா என்று அறிய தஞ்சை பெரிய கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது போலீசார்  விசாரணை நடத்துவதற்காக அழைத்தனர். பின்னர் கைது செய்வதாக தெரிவித்தனர்.
 

கோவில் வாசலில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த குடமுழுக்கு சடங்குகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை கொடுத்த தீர்ப்பின்படி அங்கு நடக்கவில்லை. 
 

கோபுர கலசம் மற்றும் கருவறையிலும் நடக்கிற சடங்குகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐந்து இடங்களில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் கோபுர கலசம் இருக்கும் இடத்திலும், கருவறையிலும் கட்டாயம் அனுமதிக்கப்போவதில்லை. ஏனென்றால் கோபுர கலசம் இருக்கும் இடத்தில் சமஸ்கிருதம் ஓதுபவர்கள் நான்கு பேரை மட்டுமே வைத்து நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். ஏனென்றால் 216 அடி உயரத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு செல்ல அவர்களுக்கு மட்டும்தான் மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் கொடுக்கப்பட வில்லை. 


 

 

300க்கும் மேற்பட்டவர்கள் சமஸ்கிருதத்தை ஓதுவதற்கு இருக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 20 சிவனடியார்களுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கப்படவில்லை. உள்ளே போனால் அவர்கள் மறுக்கப்படுகிறார்கள். 20 பேருக்கு அடையாள அட்டையே தராமல் எப்படி கோபுர கலசத்தில் ஏற்றுவீர்கள். இது நேர்மையற்ற செயல். நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் ஏற்கவில்லை. 
 

உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி என்ற இடத்தில் எங்களை போலீசார் வழிமறித்துள்ளனர். விழுப்புரம் போலீசார் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்கின்றனர். என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் என்னைப்போன்ற பல தமிழர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாவட்டர்கள். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.