Skip to main content

தமிழக உயரதிகாரிகள் திடீர் டெல்லி பயணம்! 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Tamil Nadu Higher Officials sudden  visit to Delhi


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், முடிவுகள் எப்படி இருக்கும் என தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விவாதித்துக் கொள்கிறார்கள். ஆட்சி மாற்றம் நிகழுமா? என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பிலும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. 

 

இந்த நிலையில், தமிழக தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலர் பிரபாகர், தமிழக டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் இன்று (09.04.2021) காலையில் திடீரென டெல்லிக்குப் பயணப்பட்டுள்ளனர். உயரதிகாரிகளின் இந்தப் பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி. திரிபாதி, தமிழக உள்துறை இணைச் செயலாளர் முருகன் ஆகியோர் இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.

 

இதனையடுத்து, இன்று காலை 7.15 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தமிழக அரசின் தலைமை செயலாலர் ராஜுவ் ரஞ்சன், தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் ஆகிய இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். 

 

தமிழக அரசின் உயர் அதிகாரிகள் நான்கு பேர், திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பெரும் பரபரப்பாக உள்ளது. மத்திய அரசின் அவசர அழைப்பின் காரணமாக இவர்கள் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய உயரதிகாரிகள் 4 பேரை டெல்லி அழைத்திருப்பதன் பின்னணி குறித்து விசாரித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.