Skip to main content

எம்.பி.யின் ஆதரவால் எதிர்ப்பலையை சமாளித்த அதிமுக வேட்பாளர்..!  

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

Ranipet constituency dmk and admk


இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை தொகுதி என்பது மிக முக்கியமானது. தொழிற்சாலைகள் நிரம்பிய தொகுதி இது. இந்தத் தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவும், மா.செவுமான காந்தி நிற்கிறார். அதிமுகவில் ஒப்பந்ததாரர் சுகுமார், நாம் தமிழர் கட்சியில் சைலஜா, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதம்பாஷா, அமமுக சார்பில் வீரமணி, சுயேட்சைகள் எனக் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் இருவரும் தொகுதியில் பெரிய பலமில்லாத சாதியைச் சேர்ந்தவர்கள்.

 

திமுக வேட்பாளர் காந்தி, வன்னியச் சமுதாயத்தினருக்கு சமமாக உள்ள சிறுபான்மையின வாக்குகள், பட்டியலின வாக்குகள், பிறசாதி வாக்குகள் தனக்குப் பலமாக அமையும் என நம்புகிறார். அதேபோல் சிட்டிங் எம்.எல்.ஏவாக தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் 6 மாதத்துக்கு ஒருமுறை விசிட் அடித்து உதவி எனக் கேட்பவர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்தது அவருக்குப் பெரிய பலமாக உள்ளது. இராணிப்பேட்டை, தொழிற்சாலைகள் நிரம்பிய மாவட்டம். தொழிலதிபர்களின் நண்பரான காந்தியை அதிகம் நம்புகின்றனர்.

 

Ranipet constituency dmk and admk

 

அதிமுக வேட்பாளர் தொகுதியில் உள்ள 75 ஆயிரத்து சொச்சம் வன்னியர் வாக்குகளை பாமக தனக்கு வாங்கித்தரும் என நம்புகிறார். காங்கிரஸ், தாமக, அமமுக எனப் பயணமாகி பின்னர் அதிமுகவுக்கு வந்தவர். கட்சியில் நீண்ட காலமாக உள்ள கட்சியினரை மதிக்காதது, பணம் தந்து சீட் வாங்கி வந்தவருக்கு, பணத்தாலே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என நம்புகிறார். அப்படிப்பட்டவருக்கு நாங்கள் பணியாற்ற வேண்டுமா என அதிமுகவில் சீட் எதிர்பார்த்து ஏமாந்த வன்னிய பிரமுகர்கள் பெரும் எதிர்ப்பு காட்டுகின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்தபோது முன்னாள் மா.செ ஏழுமலை தலைமையில் 3 ஆயிரம் கட்சியினர் தொடர்ச்சியாக 3 நாள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை மாநிலங்களவை எம்.பி முகமதுஜான் தான் சமாதானம் செய்து சுகுமாருக்காக களப்பணியாற்ற வைத்தார்.

 

தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வந்த முகமதுஜான், நெஞ்சுவலியால் இறந்துபோனது சுகுமாருக்கு பெரிய இழப்பு. அதேநேரத்தில் சாவு வீட்டுக்கு வந்த பிரமுகர்களிடமும் வாக்குகேட்டது அவருக்கு இஸ்லாமிய மக்களிடம் அதிருப்தியை உருவாக்கிவைத்துள்ளது. ஆனாலும் முகமதுஜான் இறப்பு இஸ்லாமிய மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அனுதாபம் தனக்கு ஓட்டாகக் கிடைக்கும் என நம்புகிறார்.

 

கணிசமான அளவில் விஷாரம் நகராட்சியில் உள்ளது இஸ்லாமிய மக்களின் வாக்குகள். மக்கள் நீதி மய்யம் ஆதம்பாஷா, இஸ்லாமிய வாக்குகள் தனக்கே என நம்புகிறார். கடைசி நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் எனத் தந்து வாங்கிவிடலாம் என ஒரு வேட்பாளரும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவிடலாம் என மற்றொரு வேட்பாளரும் முடிவு செய்துள்ளார்களாம்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்களுடைய கனவு பலிக்காது; உருட்டல் மிரட்டலுக்கு பயப்படமாட்டோம்' - இபிஎஸ் பேச்சு!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Your dream will not come true; We will not be afraid of rolling intimidation'-EPS speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'முன்பு கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வருவதற்கு இன்றைக்கு  அவருக்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய அனுப்பி இருக்கிறார்கள். இது என்ன உங்கள் அப்பா வீட்டு சொத்தா? தமிழ்நாடு.

ஏன் இங்கு இருப்பவர்களில் யாரும் வரக்கூடாதா? மேடையில் இருப்பவர்கள் வரக்கூடாதா? இது ஜனநாயக நாடு மு.க.ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய கனவு பலிக்காது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் இங்கு கிடையாது. இந்த தேர்தலோடு வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் மக்கள். போகும் பக்கம் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சாடி பேசுகிறார். என்னைப் பற்றி தரக்குறைவாக பேசுகிறார். அரசியலுக்கு வந்து விட்டால் எல்லா விமர்சனங்களும் தாங்கக்கூடிய சக்தி எங்களுடைய தலைவர்கள் எங்களுக்கு வழங்கிய விட்டு சென்றுள்ளார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் தொண்டன் கூட பயப்பட மாட்டான். உங்களுடைய உருட்டல், மிரட்டல், அவதூறு பேச்சுக்கெல்லாம் அடிபணியும் கட்சி அதிமுக அல்ல''என்றார்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.