Skip to main content

சிக்கலை உருவாக்கிய ஓ.பி.எஸ். - அச்சத்தில் நிர்மலா சீதாராமன்

Published on 25/07/2018 | Edited on 06/08/2018

 

ops-nirmala


துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு கொண்டு வந்தார்கள். அதற்காக ராணுவத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை மத்திய அரசு வழங்கியது. ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஏர் ஆம்புலன்ஸை வழங்கினார். 
 

இதுபற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆம்புலன்ஸ் என்பது பொதுவானது. ஆனாலும் ராணுவத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸை உபயோகிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குரங்கனி போன்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை அனுப்பும். 
 

 

 


ஆனால் குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்படவில்லை. அவர்களை மலையில் இருந்து பல கிலோ மீட்டர் போர்வையில் தூக்கி வந்து மதுரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் ஓ.பி.எஸ். சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் உபயோகிப்ப்பட்டுள்ளது. இவரை மதுரையில் இருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ்ஸில் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரர் ஒரு தனி நபர். இவருக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவைப்பட்டிருந்தால் கோவையில் உள்ள தனியார் ஏர் ஆம்புலன்ஸ்ஸை ம.நடராஜனுக்கு பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தியிருக்கலாம். 
 

 

மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பி.எஸ். தம்பி ராணுவ ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இது முற்றிலும் விதிமுறைகளை மீறிய செயல்'' என்கிறார்கள். 
 

இது நிச்சயம் நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான புகாராக எழும் என்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.