Published on 01/05/2019 | Edited on 01/05/2019
இன்று மே தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் கோடியேற்றினார் பொதுச்செயலாளர் விஜயகாந்த். இந்த விழாவில் பிரேமலதா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சாதி மோதலை தூண்டி விட்டு யாரும் ஆதாயம் தேடக்கூடாது, எதிர்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொள்வேன். என்று கூறினார். மேலும், திமுக ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் இருந்தாரா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.