Skip to main content

குமாரசாமி முன்பே முடிவெடுத்திருந்தால் பாஜக 175 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்: நாராயணன் பேட்டி 

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
siddaramaiah kumaraswamy yeddyurappa


இந்தியாவின் கண்களே தற்போது கர்நாடக மாநிலம் பக்கம்தான் திரும்பியுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வரும், யார் முதல்வர் என்ற விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நேரத்தில், பாஜகவின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நாராயணனை தொடர்புகொண்டோம்.
 

கர்நாடக மாநில முதல் அமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். ஆனால், தனி பெரும்பாண்மை கிடைக்காமல், கூட்டணி ஆதரவும் இல்லாமல், ஆட்சியமைப்பது சரிதானா?
 

சட்டசபையில் நிரூபிப்போம். மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டனர். மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்ததை மீறி மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியோடு சேர்வதை மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் சிலர் விரும்பாமல் போகலாம். ஆகையால் மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய கட்சி செயல்படுகிறது என்பதால் சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம். மக்களுடைய தீர்ப்புக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
 

1996ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்து பின் 13 நாட்களில் கலைந்தது. அந்த அபாயம் இல்லையா?
 

அது போன்ற அபாயம் வராது. 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற காரணத்தினால் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. யாரை அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்க கவர்னருக்கு உரிமை இருக்கிறது.
 

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ரிஸார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கூவத்தூர் ஃபார்முலா அங்கும் நடக்கிறதா?
 

இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
 

தங்கள் எம்எல்ஏக்களை மிரட்டுகிறார்கள், வலை வீசுகிறார்கள் என்று குமாரசாமியே கூறியிருக்கிறாரே?
 

என்ன ஆதாரம் இருக்கிறது? சுவர்களுக்கும் காது உண்டு என்பார்கள். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எது நடந்தாலும் சமூக ஊடகங்களில் வெளியாகும். 'குமாரசாமியிடம்  ஆயிரம் கோடி தருவதாக காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கலாம், 5 ஆயிரம் கோடி செலவு பண்ணுங்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று குமாரசாமி சொல்கிறார்' என்று நான் கூட சொல்லலாம். அப்படித்தான் குமாரசாமி வாய்க்கு வந்ததை சொல்கிறார். 

 

narayanathirupathy


காங்கிரஸ், மஜத கூட்டணி வைத்திருந்தால் பாஜக இத்தனை தொகுதிகளில் வென்றிருக்க முடியாது என்று மம்தா பானர்ஜி உள்பட பலரும் கூறுகிறார்களே?
 

காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான் காங்கிரஸ் அமைச்சர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். முதல் அமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
 

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டதால்தான் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திருந்தால், குமாரசாமி முன்பே இந்த முடிவை எடுத்திருந்தால் பாஜகவுக்கு அது சாதகமாக அமைந்திருக்கும்.  பாஜக குறைந்தது 175 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். 
 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
 

பாஜக நிச்சயம் வெற்றி பெறும். எடியூரப்பா 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியை நடத்துவார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.