Skip to main content

''வந்தார்கள், போனார்கள் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை... சசிகலாவுக்கும் இது பொருந்தும்''-வைரலாகும் ஜெ.தீபா ஆடியோ!

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

"I don't need those who have come and gone... The same applies to Sasikala's family" - J. Deepa audio goes viral!

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

''அனைவருக்கும் வணக்கம். நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மாதவன். சில காலங்களாக ஒரு சில தவறான கருத்துக்கள் மீடியாக்களில் பரவி வருவதால் அதை மறுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்பதால் மட்டுமே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது ஒரு மிகுந்த கடுமையான மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னரே 'வேதா நிலையம்' என்ற போயஸ் கார்டன் என்ற எங்களது பூர்வீக சொத்து எனக்கு வந்தது. அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களால் வாங்கப்பட்டு கட்டப்பட்ட வீட்டில் குடும்பமாக அங்கே வாழ்ந்து வந்தனர். அந்த இல்லம் எனது பாட்டி சந்தியா அவர்களின் மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது.  அதே நேரத்தில் எனது தந்தை ஜெயக்குமாரும் அங்கேதான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் அந்த காலகட்டத்தில் எனது தந்தை ஜெயக்குமார் அவர்களின் திருமண நடைபெற்றது. அதை எனது அத்தையும், அவர்களது உறவினர்களும், சித்திகள் போன்ற பெரியவர்கள் நடத்தி வைத்தனர். அதன் பின்னர் எனது தாயார் விஜயலட்சுமி, எனது தந்தை ஜெயக்குமாரும் எனது அத்தையுடன் அதே இல்லத்தில் கூட்டுக் குடும்பமாக தான் பல காலங்களாக வசித்து வந்தனர். இப்படிப்பட்ட சாதாரணமான இல்லமாக தான் அந்த வீடு அப்போது அந்த காலகட்டங்களிலிருந்தது. அந்த காலகட்டத்தில் அதே இல்லத்தில் வசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நான் பிறந்தேன் அந்த வீட்டில். அதன் பிறகு ஒரு சில காலங்களுக்கு பின்னர் எல்லா குடும்பங்களிலும் உள்ளதுபோல் ஒரு சில மிகச் சிறிய கருத்து வேறுபாடு காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

 

அதன் பின்னர் டி.நகரில் உள்ள எங்களது மற்றொரு பூர்வீக இல்லத்தில் நாங்கள் வசித்து வந்தோம். இதற்கு இடையே அத்தை அழைக்கும்போதெல்லாம் நாங்கள் அங்கு சென்று வருவோம். ஒருகால கட்டத்தில் எங்களை இங்கேயே இருக்கவைக்க விரும்பியதால் அங்கு வசித்து வந்தோம். அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம். இதுதான் அந்த வீட்டில் நாங்கள் வாழ்ந்ததற்கான எனக்குத் தெரிந்த விஷயங்கள். எனது தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் தெரிந்து கொண்ட ஒரு சில விஷயங்கள். ஆகவே அது எங்களுடைய பூர்வீக சொத்து என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இருக்க முடியாது. சட்ட ரீதியாக எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அது பூர்வீக சொத்து தான். பாட்டி அவர்களால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் எங்கள் அத்தைக்கு அவர் கொடுத்தார். அத்தை திருமணமாகாதவர் என்பதால் தந்தை வழியாக அவர்தான் ஒரே உடன்பிறப்பு சகோதரர். அவருடைய பிள்ளைகளான எனக்கும் எனது சகோதரர் தீபக்கிற்கும் சட்ட ரீதியாக கோர்ட் வழியாகத்தான் இந்த சொத்தை நாங்கள் திரும்பப் பெற்றோம்.

 

இப்படி உள்ள சூழ்நிலையில் யாரோ மூன்றாவது நபர்கள் அத்தையுடன் இருந்தார்கள், வந்தார்கள், போனார்கள், சென்றார்கள் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை எனக்கு இதெல்லாம் தேவையற்றது. எனக்கு தேவை என்னுடைய அத்தை மட்டும் தான். அவருடன் யார் இருந்தார், யார் போனார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய கருத்து. ஆகவே அவர் சொன்னார், இவர் சொன்னார், அவர்கள் விரும்பினார்கள், இவர்கள் விரும்பினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்தவரை தேவையற்ற கருத்துக்கள். அவருடன் அரசியல் பயணத்தில் எண்ணற்ற பேர் இருந்திருப்பார்கள். எத்தனையோ பேர் பணிக்கு இருந்திருப்பார்கள். மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் கூட பிரமிக்க வைக்கக்கூடிய அந்தஸ்திலும், பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நபருக்கு எத்தனையோ பேர்களுடைய பணிகள் தேவைப்பட்டிருக்கும், உதவிகள் தேவைப்பட்டிருக்கும். ஆகவே அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் எல்லாம் வந்து உரிமை கோர முடியாது. குடும்பத்திலோ, குடும்ப அந்தஸ்திலோ, குடும்ப சொத்துகளிலும் உரிமை கோர முடியாது. ஆகவே இதையெல்லாம் கடமையாக மறுக்கிறேன். அது யாராக இருந்தாலும் சரி. அவருடனே நாங்கள் பயணித்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இது பொருத்தமானது. அவர்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து நீங்கள் மறுக்க வேண்டும். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை, யாரையும் அணுகவும் இல்லை, யாரும் எங்களையும் அணுகவில்லை. வேதா நிலையத்தை பொருத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் அங்கே குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆகவே இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.