Skip to main content

“இங்கு வராதவர்களுக்கு இனி இடமில்லை..” - ஓ.பி.எஸ்-ஐ நீக்கச் சொல்லும் தங்கமணி

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Ex Minister Thangamani speech at ADMK General body meeting

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. 

 

இதில் முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர், “தொண்டர்களால் நடத்தப்படுகின்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருந்தாலும், நிரந்தரப் பொதுச்செயலாளராக, ஒரு சாமானியனாக, எம்.ஜி.ஆரின் புன்னகையோடு, ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையோடு, அனைவரையும் அரவணைத்து செல்லும் பொறுப்பேற்று இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை வலிமையோடு எதிர்க்க வேண்டும். அதற்கு வலிமைமிகு தலைமை எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கின்ற ஒரே ஒருவர் எடப்பாடி பழனிசாமி. 

 

இந்தப் பொதுக்குழுவை நடத்தக்கூடாது, எப்படியாவது நிறுத்தவேண்டும். இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, அதிமுகவில் வளர்ந்தவர்கள், அதிமுக அழிந்துவிடும் என்று காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அழிகின்ற காலம் விரைவில் இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

 

இங்கு பொதுக்குழு நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் (ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம்) இங்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. கருத்து சொல்லவேண்டும் என்றால் இங்கு வந்துசொல்லியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, கோடாரியை எடுத்து சென்ற தலைமை அலுவலகத்தை இடித்து உள்ளே செல்கின்றனர். அவர் உண்மையான அதிமுக தொண்டனா? எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அமைதியாக இருந்ததால் எடப்பாடி இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். ஆனால், நாம் அந்த பொறுப்புக்கு வரவில்லை என்றால், இந்த இயக்கமே அழிந்துவிட வேண்டும் என்பதற்காக இன்று அவர்கள் திமுகவின் துணையோடு நடத்தும் நாடகத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. 

 

கொடநாடு வழக்கு எடப்பாடியே அதனை கண்டுபிடித்து முடியும் தருவாயில்; ஆட்சி மாற்றத்தின் காரணமாக; இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் எனும் காரணத்திற்காக அவர்கள் இந்த வழக்கை  எடுத்து நடத்துகிறார்கள். மேலும், இங்கு இருக்கின்ற நம் அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களும் அதனை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், இவர்களெல்லாம் அதிமுகவின் தொண்டர்களா? 

 

அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் வாயிலாக நான் ஒரு கோரிக்கை வைக்கின்றேன், இவ்வளவு துரோகம் செய்தவர்,  காட்டிக்கொடுப்பவர்கள் இந்தக் கட்சிக்கு தேவையா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். 

 

இது வெறும் ஆரம்பம் தான். எடப்பாடியின் எக்ஸ்பிரஸ் துவங்கிவிட்டது. அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40ம் வென்று, செங்கோட்டையை அடையும். அதேபோல், அவர் தலைமையில் 2026ல் ஜார்ஜ் கோட்டையை அடையும். இங்கு வந்தவர்களுக்கு மட்டுமே இனி இந்த எக்ஸ்பிரஸில் இடம்; மற்றவர்களுக்கு இடமில்லை” என்று பேசினார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.