Skip to main content

’இணைவதற்கு கூப்பிடுவதற்கே அவர்களுக்கு தகுதியில்லை’ -இபிஎஸ் - ஓபிஎஸ் அழைப்புக்கு தங்க.தமிழ்ச்செல்வன் பதிலடி

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
tn

 

தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு  அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.   

 

இதையடுத்து தினகரன் அணியில் இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் இந்த அழைப்பு குறித்து,   ‘’அதிமுகவில் இருந்த 90 சதவிகிதத்தினர் இன்று அமமுகவில் இருக்கின்றனர்.   பொதுமக்கள் ஆதரவும் எங்களுக்குத்தான் இருக்கிறது.   இப்படிப்பட்ட நிலையில் மிக குறைவான உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பு இணைய வேண்டும் என்று அழைத்தால் அதற்கு வாய்ப்பில்லை.   அவர்கள் வேண்டுமானால் சில தலைகளை நீக்கிவிட்டு அமமுகவில் இணைந்தால் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க  வாய்ப்பிருக்கிறது.   மற்றபடி, இணைவதற்கு கூப்பிடுவதற்கே அவர்களுக்கு தகுதியில்லை’’என்று பதிலடி தந்துள்ளார்.


மேலும், தினகரனை விட்டு எங்களை மட்டும் அழைப்பது ஏன்?  டிடிவி தினகரனை விட்டு நாங்கள் வரமாட்டோம்  என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் ஓபிஎஸ் 15 நாள் ஆயில் மசாஜ்? - தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

OPS 15 Day Oil Massage in Kerala?; Thanga Tamilselvan

 

தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “வரும் ஞாயிறன்று போடியில் முல்லைப் பெரியாறு - கொட்டக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்படுகிறது. இவ்விழாவிற்கு அமைச்சர்கள் வர இருக்கிறார்கள். போடி எம்.எல்.ஏ என்பதன் அடிப்படையில் ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வந்தால் நல்லது. வெற்றி பெற்ற பின் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. தேர்தலில் தோற்ற தங்க தமிழ்ச்செல்வன் இரண்டு வருடமாக வந்து கொண்டுதான் உள்ளேன்.

 

தேர்தலில் தோற்ற எங்களுக்கு முடங்கிய திட்டங்களை அமைச்சரிடம் சொல்லி நிவர்த்தி செய்யவும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய ஆர்வமும் உள்ளது. நாங்கள் இந்த ஊரைச் சுற்றி வருகிறோம். வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. கேரளாவில் 15 நாள் ஆயில் மசாஜ் எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது.

 

நாங்கள் அதிகாரிகளை அழைத்துச் சென்று அந்த அணை குறித்து ஆய்வு செய்து திட்டம் தீட்டினோம். இந்த குடிநீர் திட்டம் நகராட்சி மக்களுக்காகவே குடிநீர் தினமும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.