Skip to main content

விலகிய தேமுதிக... அங்கு என்ன தான் நடக்குது... அமைச்சரிடம் கோபமான எடப்பாடி!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தராமல் தனித்து களமிறங்கியுள்ளது தே.மு.தி.க. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ சம்பத்குமார், அமைச்சர் அன்பழகனிடம் சென்று, உள்ளாட்சி தேர்தலில் தர்மபுரியை நம்முடையதாக காட்டவேண்டும் என்ற கட்சித் தலைமையின் கனவு இருக்கும்போது, "தே.மு.தி.க. புல்லட் மாரி முத்து அதை செய்யவிடாமல் வாக்கு வங்கிகளை பிரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவரை நீங்கள் அழைத்து பேசவேண்டும். அப்படி இல்லை என்றால் தர்மபுரி உள்ளாட்சித் தேர்தலில் கட்சித் தலைமையின் கனவு பலிக்காது'' என நொந்து பேசியுள்ளார். அமைச்சரும் செய்வதறியாது கையை பிசைந்து வருகிறார்.

 

admk



இந்த விவகாரம் தர்மபுரியில் பரபரப்பாகி வரும் நிலையில், இது தொடர்பாக நம்மிடையே பேசிய தே.மு.தி.க. கிழக்கு மாநில கழக கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து, "தர்மபுரியை பொறுத்தவரை கட்சியில் அட்வான்ஸ் புக்கிங்காகத்தான் எல்லாம் நடந்துள்ளது. கூட்டணிக்கு எந்த தர்மமும் அவர்கள் காட்டவில்லை. நாங்கள் எந்த பகுதியிலெல்லாம் வாக்கு அதிகமாக வாங்கினோமோ அதை அவர்களே எடுத்துக்கொண்டு, அவர்கள் தோற்கும் இடங்களை எங்களுக்கு கொடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? அதனால், நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுகிறோம்''’என்றார். ஆனால், அமைச்சர் அன்பழகனிடம் இதுகுறித்து பேசியபோது, "நாங்கள் தலைமை சொல்லுவதை செய்துவருகிறோம். அவர்கள் தேவையற்ற விசயத்தையெல்லாம் பேசிவருகிறார்கள். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று முடித்துக்கொண்டார்.
 

 

admk



தர்மபுரி அ.தி.மு.க.வினர் வட்டாரத்தில் இது குறித்து விசாரித்தபோது, "தர்மபுரியை தனக்கான தொகுதியாக மாற்றி அமைத்து, கொங்கு பெல்ட்டை நீட்டிக்க வேண்டும். மேலும், வன்னியர்களின் வாக்கை அ.தி.மு.க. வாக்காக மாற்ற வேண்டும். அப்படிச்செய்வதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அது உதவும் என்று எடப்பாடி திட்டம் போட்டிருக்கிறார். அவரின் கனவை கானல் நீராக மாற்றும் நிலையில் தேர்தல் கள நிலவரம் இருப்பதால், இவை அனைத்தும் தி.மு.க.விற்கு சாதகமாக போய்விடும் என்பதை அறிந்து, ஆத்திரம் அடைந்திருக்கிறார் எடப்பாடி. தனது கோபத்தை அமைச்சரிடத்திலும் வெளிப்படுத்தி, அங்கு என்னதான் நடக்குது?'என்று ஏகத்துக்கும் எகிறியிருக்கிறார் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.