Skip to main content

மின் கட்டணத்தில் குளறுபடி... ஈரோடு தி.மு.க. ஆர்பாட்டம்...

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

 

கரோனா என்ற இந்த கொடிய காலத்தில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழைகள் முதல், சிறு, குறு தொழில் புரிவோர், தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் முதல் வறுமை, குடும்ப கஷ்டம், கடன் சுமை என வாழ்வியல் போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

 

இந்த நிலையில் தமிழக அரசின் மின்சார வாரியம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் பொதுமக்கள் அவர்களில் வீடுகளில் பயன்படுத்திய மின் அளவை கணக்கிட்டு அதை செலுத்துமாறு மக்களிடம் திணித்துள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் புரியும் உற்பத்தியாளர்களையும் மின் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்தித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தொற்று காலத்தில் ஏற்கனவே பொருளாதார சுமையால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு மின் கட்டணம் அதிக பாரமாக அவர்கள் தலையில் ஏறி உள்ளது. இது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என தமிழக அரசை கண்டித்து எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வந்தது.

 

மேலும் மின்கட்டணத்தில் பல குளறுபடிகள் உள்ளது அவை சரி செய்யப்பட வேண்டும் முழுமையான கட்டனத்தை கட்ட நிர்பந்தம் செய்யக்கூடாது. மற்ற மாநிலங்களில் 25 சதவீதம் குறைத்துள்ளதுபோல், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இன்று 21 ந் தேதி தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தி.மு.க. தலைமை அறிவித்தது.

 

ஈரோட்டில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில், அவர் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவரது மாணிக்கம்பாளையம் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதேபோல திமுக மாநில மற்றொரு துணை பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அவர் இல்லத்தின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பவானியில் கட்சியினருடன் சேர்ந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதேபோல் ஈரோடு  திமுகவினர் பலரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மின்கட்டணத்தை மக்கள் தலையில் சுமத்தாதே... ரத்து செய் ரத்து செய் மின் கட்டணத்தை ரத்து செய்... என கோஷமிட்டனர்.

 

இதேபோல் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.