Skip to main content

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம்

Published on 07/12/2020 | Edited on 07/12/2020

 

 

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு கூட்டம்,  திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தொடங்கியது.

 

திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் சார்பில் இன்று நடைபெற்று வரும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி N.சிவா, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அடங்கிய குழுவினர் பங்கேற்று மனுக்களை பெற்று வருகின்றனர்.

 

இந்தக் கூட்டம் முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாய சங்கத்தினர், வியாபாரிகள், வணிகர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், மோட்டார் வாகன ஓட்டுனர், உரிமையாளர்கள், கட்டிட கலைஞர்கள்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  தங்களது  கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும்  நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 150க்கும் மேற்பட்டோர் தங்களது கருத்துகள் அடங்கிய கடிதங்களை போட்டனர். 

 

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பெறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பெறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்