Skip to main content

இஃப்தார் விருந்து குறித்து அவதூறு! - பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

இஃப்தார் விருந்து குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

RajaSingh

 

 

 

தெலுங்கானா மாநிலம் கோஷாமகால் தொகுதியைச் சேர்ந்தவர் ராஜா சிங். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர்போனவர். இஸ்லாமியர்கள் தங்களது புனித பண்டிகையான ரம்ஜானுக்காக நோன்பு கடைபிடித்து, ஒவ்வொரு நாளும் இஃப்தார் விருந்து வைப்பது வழக்கம். இந்த இஃப்தார் விருந்தை மதம் உள்ளிட்ட பிரிவினைகள் கடந்து பலரும் அனுசரித்து வருகின்றனர். 
 

இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. ராஜாசிங் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் தலைவர்கள்தான் இஃப்தார் விருந்தினை நடத்துகிறார்கள். அதனால், இதுபோன்ற விழாக்களில் நான் கலந்துகொள்வதில்லை. தெலுங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் இதுபோன்ற விருந்துகளில் பிஸியாக இருக்கின்றன’ என தெரிவித்தார். மேலும், குரான் பற்றி பேசிய அவர், ‘அந்த பச்சை புத்தகம் நாடு முழுவதும் தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை முழுவதுமாக தடை செய்யவேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார். 
 

 

 

இந்நிலையில், அவர்மீது ஃபலக்நாமா காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு தடியடி - சல்மான் கான் வீட்டில் பரபரப்பு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
police lathi charge in Salman Khan fans

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மற்றும் தனது பிறந்தநாளின் வீட்டின் முன் கூடியிருக்கும் ரசிகர்களைச் சந்திப்பார் சல்மான் கான். அந்த வகையில் இன்று மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டின் முன்பு, ரமலான் வாழ்த்து பெற அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் கூடியிருந்தனர். அப்போது அவர்கள் ஆரவாரம் செய்து கூச்சலிட்டனர். அவர்களால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவர்களை தடியடி நடத்தி போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

சல்மான் கான், தற்போது ஏ.ஆர் முருகதாஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை சஜித் நதியாத்வாலா தயாரிக்க அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியான நிலையில், ரமலான் நாளான இன்று படத்திற்கு சிக்கந்தர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள்” - விஜய்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
vijay ramzan wishes

ரமலான் பண்டிகை இன்று (11.04.2024) கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால் காலை முதலே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம் மற்றும் கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ரமலான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய், சமூக வலைத்தளப்பக்கம் வாயிலாக ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

த.வெ.க எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் சார்பாக பகிர்ந்துள்ள பதிவில், “புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.