Skip to main content

அதிமுகவுக்கு எதிராகத்தான் பாஜக உண்ணாவிரதம் இருக்க வேண்டும்: கோபண்ணா

Published on 13/04/2018 | Edited on 14/04/2018


 

amit shah


பாராளுமன்றத்தை காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் முடக்கியதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடந்தது. கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் நடந்த உண்ணாவிரத்தில் பங்கேற்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாராளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடக்கியதால் ரூபாய் 333 கோடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. வங்கி மோசடி, காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க ராஜ்நாத் சிங் உறுதி அளித்திருந்தார். மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை கிடையாது.  நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வேலையைத்தான் காங்கிரஸ் செய்கிறது என்று குற்றம் சாட்டினார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா,
 

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி காரணம் அல்ல. தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்குவதில் வெற்றி பெற்றதாக, அதனை ஒரு சாதனையாக அஇஅதிமுக கூறி வருகிறது. பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ள அஇஅதிமுக மூலமாக நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடர் முழுவதையும் முடக்கி அதன் மூலம் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதம் நடத்தியிருக்கலாம்.

 

Gopanna


 

அந்த விவாதம் நடைபெறாமல் தடுப்பதற்காகவே பாஜக அஇஅதிமுகவோடு ஒரு ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி இத்தகைய முடக்கத்தை அஇஅதிமுக மூலமாக செய்திருக்கிறது. இதன் மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்தை தடுத்தது பாஜகதானே தவிர காங்கிரஸ் அல்ல. காங்கிரஸ் கட்சி எப்போதுமே விவாதத்திற்கு தயாராக இருக்கிறது. நாடாளுமன்றத்தை முடக்கிய அஇஅதிமுகவுக்கு எதிராகத்தான் பாஜக உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அல்ல. இவ்வாறு கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.