Published on 20/03/2019 | Edited on 20/03/2019
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரும், களங்கமும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் வி.பி. கலைராஜனை நீக்குவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தவர் வி.பி. கலைராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அமமுக அமைப்புச் செயலாளராக இருந்த சுகுமார் பாபு என்பவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக நியமித்துள்ளார்.