Skip to main content

வெற்றிவேலின் உடலை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து கதறி அழுத மனைவி...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
ammk vetrivel family

 

 

அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார்.

 

dddd

 

இன்று காலை வெற்றிவேலின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் வசித்த அயனாவரம் திவான் பகதூர் சண்முகம் தெருவில் உள்ள வீட்டின் அருகே கொண்டு வரப்பட்டது. 

 

vvv

 

அப்போது வெற்றிவேலின் உடலை பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெற்றிவேலின் உடலுக்கு அவரது மகன் பாரத் இறுதி சடங்கு செய்தார். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்