Skip to main content

“கலைஞர் துவங்காத தமிழ் பல்கலைக்கழகத்தை மலையாளியான எம்.ஜி.ஆர். துவங்கினார்..” வைத்திலிங்கம் அதிரடி

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

ADMK Booth committee meeting at trichy


2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி மற்றும் மகளிர் குழு அமைத்தல் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார். தலைமை ஏற்று பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “தற்போது வந்திருக்கும் நடிகர்களெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை போல நல்லாட்சி நடக்கும் என்றுதான் கூறுகிறார்கள். புதிய கட்சியைத் தொடங்கும் நடிகர்களும் மற்றவர்களும் அறிஞர் அண்ணாவையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியை குறித்துதான் சிந்தித்துப் பேசுகிறார்கள். அவர்களுடைய ஆட்சி நல்லாட்சி என்றும் கூறுகிறார்கள். ஆனால், அப்படி கலைஞரை எந்த ஒரு நடிகர்களும் குறிப்பிட்டு பேசுவதில்லை.” என்றார். 

 


அவரை தொடர்ந்து  இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “தி.மு.க. தலைவர் கலைஞர் ஆரம்பிக்காத தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அன்று மலையாளியான எங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான் முதல் முதலில் துவங்கினார். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதனால் 350 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

 

ADMK Booth committee meeting at trichy

 

வேளாண் மண்டலம் விவசாயிகளுக்கு வேண்டிய நன்மைகளை செய்துள்ளது. இப்படி எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு, தி.மு.க. மத்திய அமைச்சராக இருந்த ராஜா, ஜெயலலிதாவைப் பற்றி மிக இழிவாகப் பேசுகிறார். ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் யாருக்கும் தகுதி இல்லை, யோக்கியதை இல்லை.

 

கலைஞரிடம் ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, கலைஞர், “ஒரு தைரியம் மிக்க பெண்மணி” என்று கூறினார். அவரிடம் பிடித்ததே அவருடைய தைரியம் என்று சொன்னவர் கலைஞர். அதையே ராஜாவுக்கு சொல்கிறேன், 2ஜி வழக்கில் முதலில் துவக்கத்திலிருந்து இன்றுவரை அப்பில் செய்யப்பட்டு வருகிறது. அதில் இருந்து விடுதலையாகி பின் பேசலாம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. ஏனென்றால் சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்கள் என்று சர்க்காரியா சொல்லியிருக்கின்றார்.

 

ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் வைத்து வாபஸ் வாங்கிக்கொண்டு சென்றார். ஆனால் ஜெயலலிதா, நான் தவறு செய்யவில்லை நீதிமன்றம் செல்கிறேன் என்றார். ஆனால், நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஒருவர் மறைந்துவிட்டால் நீதிமன்ற தீர்ப்பு அவரை பாதிக்காது. அவரைப் பற்றி குறை சொல்லக் கூடாது. அந்த அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். 

 

இந்த இயக்கம் எந்த நிலையிலும் எப்பொழுதும் தனித்துவமிக்க இயக்கம். இன்றைக்கு இந்த இயக்கம் புரட்சித்தலைவி ஜெயலலிதா சொன்னதுபோல், அவர் மறைவுக்குப் பிறகும் நூறு ஆண்டுகாலம் இருக்கும்.
 

 

100 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும். அதற்கு நாம் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். நமது பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் 25 பேர்களாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் முதல், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூத்க்களில் இருந்து கிடைக்கின்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை படிவங்களை சரி பார்ப்போம். அதேபோல் மகளிர் குழுவையும் பார்ப்போம். பூத் கமிட்டியில் இருக்கும் இளைஞர்கள் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களுக்கு லாரிகளில் குடிநீர் கொண்டு சென்று வழங்கவேண்டும்.

 


வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள், இரண்டு இடத்தில் வாக்காளர் பெயர் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுத்து இப்பொழுது நீக்கியும் சேர்த்தும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் சரி பார்க்க வேண்டுமெனில் மார்ச் 1ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் 2 மாதம் 10 நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் இதைச் செய்து முடிக்க வேண்டியது ஒவ்வொரு கட்சிக்காரருடைய கடமை. 




ஏனென்றால், நாம் இலக்கை அடைய வேண்டும் என்றால், முதலில் இந்த இரண்டு மாதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே நோக்கில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். எதையும் சிந்தித்து, ஆரவாரமில்லாமல் செய்ய வேண்டும். இந்த சக்தி மிகவும் மகத்தானது, அந்த சக்தியை கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் வீணாக்காமல் செயல்வடிவம் கொடுத்து அ.தி.மு.க. வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும். அதுதான் புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் நாம் செய்கின்ற நன்றிக்கடன். முதல் தடவை இளைஞர் இளம்பெண்கள் பாசறை பெண்களுக்கு கமிட்டியை அமைத்து இந்த அ.தி.மு.க. வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.