Skip to main content

நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்: கல்விக் கடன் ரத்து செய்யப்படும்: திமுக தேர்தல் அறிக்கை

Published on 19/03/2019 | Edited on 19/03/2019



2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

 

அதில், தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட சட்டத்திருத்தம் செய்யப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும். கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.  ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.



காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாள் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை முன்பிருந்தது போல் குறைக்கப்படும். மாநிலங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் நிதி பங்கிடு செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பழைய நடைமுறை கொண்டுவரப்படும். 


 

dmk


 

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள பெண்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். மத்திய நிதிக்குழுவின் முடிவுகள் மாநில மன்றத்தால் நிர்வகிக்கப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்படும். கால முடிவுற்ற பிறகும் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும்.



மதுரை, திருச்சி, சேலம், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். புயல் பாதிக்கப்படும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு இல்லம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும். மாணவர்களுக்கு இலவச ரயில் பயணங்கள் அளிக்கப்படும். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்துவோம். உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.