Skip to main content

"அம்பானி ஃபைலுக்கு ஓகே சொன்னா 150 கோடி கிடைக்கும்னாங்க" - மேகாலயா ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Published on 22/10/2021 | Edited on 23/10/2021

 

meghalaya governor

 

மேகாலயாவில் ஆளுநராக இருப்பவர் சத்ய பால் மாலிக். இவர் இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தார். இந்தநிலையில் இவர், தான் ஜம்மு காஷ்மீரின் ஆளுநராக இருந்தபோது அம்பானி தொடர்பான கோப்பும், ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்த நபரின் கோப்புக்கும் அனுமதி அளித்தால், கோப்புக்கு தலா 300 கோடி கிடைக்கும் எனத் தனது செயலாளர்கள் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; காஷ்மீருக்குச் சென்ற பிறகு, இரண்டு கோப்புகள் (அனுமதிக்காக) என்னிடம் வந்தன. ஒன்று அம்பானியைச் சேர்ந்தது. மற்றொன்று முந்தைய மெஹபூபா முப்தி தலைமையிலான (பிடிபி-பாஜக கூட்டணி) அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஆர்எஸ்எஸ்-தொடர்புடைய நபருடையது. அவர் தன்னை பிரதமருக்கு நெருக்கமானவர் எனக் கூறிக்கொண்டார்.

 

இரண்டு துறைகளிலும் ஊழல் இருப்பதாகச் செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதன்படி நான் இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தேன். கோப்புகளை அனுமதித்தால் இரண்டு கோப்புகளுக்கும் தலா 150 கோடி கிடைக்கும் என செயலாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், நான் ஐந்து குர்தா-பைஜாமாவுடன் வந்தேன். அதனுடைய கிளம்புவேன் என அவர்களிடம் தெரிவித்தேன்.

 

இந்த கோப்புகளுக்குத் தொடர்புடையவர்கள்,பிரதமரின் பெயரைப் பயன்படுத்தியதால், முன்னெச்சரிக்கையாகப் பிரதமரிடம் அந்த கோப்புகளைப் பற்றியும், ஊழல் பற்றியும் தெரிவித்தேன். நான் பதவியை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறேன். ஆனால் பதவியில் இருந்தால் இரண்டு கோப்புகளையும் அனுமதிக்க மாட்டேன் எனத் தெரிவித்தேன். இவ்வாறு சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

'

மேலும் தான் கூறியதற்குப் பிரதமர் மோடி, ஊழலில் சமரசம் செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அதற்காக பிரதமர் மோடியையும்  சத்ய பால் மாலிக் பாராட்டினார்.

 

சத்ய பால் மாலிக், தன்னிடம் வந்து கோப்புகள் குறித்த விவரத்தை விரிவாக விளக்கவில்லை. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்குக் காப்பீடு வழங்க அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு ஜம்மு காஷ்மீர் அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தை சத்ய பால் மாலிக் இரத்து செய்ததோடு, ஒப்பந்த நடைமுறை வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு பணியகத்திற்குப் பரிந்துரைத்தார். அதுதொடர்பான கோப்பையே சத்ய பால் மாலிக் தற்போது குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார்.