Skip to main content

“இஸ்லாமிய சமூகம் அடிமைகள் இல்லை..” - காங்கிரஸ் மூத்த தலைவரின் வைரல் வீடியோ

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 Viral video of senior Congress leader

 

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் குரேஷி 2014 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்துள்ளார். அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உருது அகாடமியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில், பா.ஜ.க கட்சியின் செய்தி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, அஜீஸ் குரேஷி பேசியுள்ள ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். தற்போது அது வைரலாகிவருகிறது.

 

பங்கஜ் சதுர்வேதி வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் அஜீஸ் குரேஷி, “இந்த நாட்டில் 22 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு கோடி இஸ்லாமியர்கள் இறந்தால் ஒன்றும் பிரச்சனை இல்லை. எனக்கு எந்தவித பயமும் இல்லை. இன்று நேருவின் வாரிசுகளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் தாங்கள் ஒரு இந்துக்கள் என்று பெருமையாக கூறி மத ஊர்வலம் நடத்துகின்றனர். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிலைகளை நிறுவி மூழ்கடிக்கிறார்கள்.  காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை.

 

நாட்டில் உள்ள காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய சமூகம் தங்களின் அடிமைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் ஏன் உங்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை. நீங்கள் அவர்களை ராணுவம், காவல்துறை, கடற்படை ஆகிய துறைகளில் அழைத்து செல்வதில்லை. பிறகு ஏன் இஸ்லாமியர்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று அஜீஸ் குரேஷி பேசியிருந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.