Skip to main content

"தமிழ்நாட்டிற்கு வாருங்கள், பயனடையலாம்" - சுவீடன் நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் விடுத்த அழைப்பு!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

rajnath singh

 

இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு தொடர்பான இணையக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், சுவீடனின் பாதுகாப்பு தொழிற் நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

 

இந்த இணையக் கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில், முற்போக்கான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இந்திய பாதுகாப்புத்  தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இது இந்தியத் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய தேவையையும் பூர்த்தி செய்ய இந்திய பாதுகாப்பு தொழில்துறையைத் தூண்டியுள்ளது.

 

இந்தியா மற்றும் சுவீடன் பாதுகாப்பு தொழிற்சாலைகள் இணைந்து உற்பத்தி செய்வதற்கும், இணைந்து வளர்ச்சியடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்தியத் தொழிற்சாலையால், சுவீடன் தொழிற்சாலைகளுக்குப் பொருட்களை வழங்க முடியும். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பாதுகாப்பு காரிடர்களில் (இராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்) முதலீடு செய்ய சுவீடன் நிறுவனங்களை அழைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன். அங்கு மாநில அரசுகள் வழங்கும் தனித்துவமான சலுகைகளாலும், இந்தியாவின் திறமைமிகு தொழிலாளர்களாலும் நீங்கள் பெரிதும் பயனடையலாம். இந்தியாவின் பாதுகாப்பு தொழிற்சாலைகளைப் பார்வையிடச் சுவீடனிலிருந்து ஒரு உயர்மட்ட தூதுக்குழு வரவேண்டும் என என இந்திய அரசாங்கத்தின் சார்பாக அழைப்பு விடுகிறேன்.

 

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.