Skip to main content

கோடைக்கு மோர் கொடுக்கும் காவலர்கள்!!!

Published on 29/03/2018 | Edited on 29/03/2018


 

 traffic cops are being given two packets of buttermilk

ஹைதராபாத் போக்குவரத்து போலீசார் மக்கள் மீது அக்கறைகொண்டு  கோடைகாலத்தை சமாளிக்கும் வகையில், சிக்னலில் பொதுமக்கள் நிற்கும்பொழுது அவர்களே சென்று வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க ஒவ்வொருவருக்கும் இரண்டு மோர் பாக்கெட்டுகளை வழங்குகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து உயரதிகாரிகள் தெரிவித்தது, இந்த கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் மக்களுக்கு பணியில் உள்ள காவலர்களே சென்று இரண்டு மோர் பாக்கெட்டுகளை வழங்குகின்றனர். இந்த சேவையானது ஹைதராபாத் முழுவதிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீரின் தேவை என்பது இந்த கோடைகாலத்திற்கு மிகவும் அவசியம் என்பதால் மக்களிடம் சுகாதாரமான நீரை அதிகமாக எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திக்கிறோம். மேலும் மோர் பாக்கெட்டைத் தவிர குளுக்கோஸ், தண்ணீர் பாட்டில் போன்றவையும் தருகிறோம் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சிரித்த முகம் வேண்டும்; நூதன முயற்சியால் தொழிலதிபர் உயிரிழப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Surgery for smiling face; businessman dies

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் சிரித்த முகம் வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ள முயன்றபோது சிகிச்சையின் போதே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த 28 வயது தொழிலதிபர் லட்சுமி நாராயணன். அண்மையில் லட்சுமி நாராயணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு சிரித்த முகம் இருக்க வேண்டும் என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து ஹைதராபாத் ஜூபிலி பகுதியில் உள்ள எப்.எம்.எஸ் இன்டர்நெஷனல் டெண்டல் கிளினிக்கில் கடந்த 16 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

தான் அறுவை சிகிச்சை செய்யப்போவதை வீட்டில் யாருக்கும் லட்சுமி நாராயணன் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. கிளினிக்கிற்கு தனியாக சென்ற அவருக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போதே அவர் உயிரிழந்தார். இதற்கிடையில் லட்சுமி நாராயணின் தந்தை ராமுலு அவருக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது அழைப்பை எடுத்த கிளினிக் ஊழியர்கள் அவர் இறந்துவிட்டதை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை ராமுலு  அலறித்துடித்துள்ளார்.

தொடர்ந்து அதிகஅளவிலான மயக்க மருந்து கொடுத்ததால் தன் மகன் உயிரிழந்ததாக போலீசில் லட்சுமி நாராயணனின் தந்தை புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.