Skip to main content

இறந்த உடலுடன் மூன்று வருடங்கள் வாழ்ந்தவர் கைது

Published on 07/04/2018 | Edited on 07/04/2018

கொல்கத்தாவில் பெஹாலாவில் இறந்த சடலடத்துடன் வாழ்ந்ததாக சுபப்ரதா என்பவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெஹாலாவில் சுபப்ரதா என்பவரின் தாயார் பீனா மஜூம்தார் 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் இறந்துள்ளார். அவரது உடலை அவர் அடக்கம் செய்தாரா? இல்லையா என யாருக்கும் தெரியவில்லை. இதைப்பற்றி அருகில் உள்ளவர்களும் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து கடந்த புதன் கிழமை சுபப்ரதா இறந்த சடலத்துடன் வாழ்கிறார் என்று தகவல் வெளிவர போலீசார் அன்று இரவே சுபப்ரதா வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். 
 

body

 

சோதனையில் வீட்டின் ஒரு அறையில் குளிருட்டப்பட்ட ஒரு பெட்டியில் வேதிபொருள்களின் உதவியுடன் பதப்படுத்தப்பட்ட ஒரு வயதான பெண்ணின் உடலைக் கண்டறிந்தனர், மேலும் அந்த சடலத்தின் கல்லீரல், குடல் போன்ற உள்ளுறுப்புகள் எடுக்கப்பட்டு ஒரு ஜாடியில் வேதியல் முறையில் பதப்படுத்தப்பட்டு வைத்திருந்ததையும் கண்டறிந்தனர். மேலும் விசாரணையில் அது சுபப்ரதாவின் தாய் பீனாவின் உடல்தான் எனவும் சோதனையில் உறுதியானது. எகிப்தில் ''மம்மி'' எனப்படும் இறந்தவர் உடலை பாதுக்காக்கும் முறையில் இவர் உடலை பதபடுத்தியுள்ளார். இதுபோன்ற முறையை அவர் எவ்வாறு கையாண்டார் என்ற விசாரணையில் அவர் தோல் பதனிடும் முறையில் கைதேந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் மறுஜென்மம்,உடல் பதப்படுத்துதல் சம்பந்தமான புத்தகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
 

body

 

அவரைத் தொடர்ந்து விசாரித்ததில் உடல் பதப்படுத்தப்பட்டால் என்றாவது ஒரு நாள் என் தாய் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார் சுபப்ரதா, அவர் மட்டுமின்றி அவரது 90 வயது தந்தையும் அதே வீட்டில் இருந்துவந்தாகவும் அவரும் தன் மனைவி உயிர்பெற்று வருவார் என்ற  நம்பிக்கையில்தான் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் தாயாரின் பென்ஷன் தொகையை அவர் இறந்து மூன்று வருடங்களாக பெற்றிருக்கிறார், எனவே சான்றிதழ்களில் பாதுகாக்கப்பட்ட சடலத்தின் கைரேகைகளை பதிவுசெய்து தாயின் பென்ஷன் தொகையை தொடர்ந்து பெறுவதற்காக சடலத்தை பாதுகாத்துவந்தாரா என பலகோணத்தில் விசாரித்து வருகின்றனர்.    

இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் பார்தே என்ற மென்பொறியாளர் இறந்த தன் சகோதரியை ஆறு மாதங்களாக அடக்கம் செய்யாமல் ஒரே வீட்டில் சடலத்துடன் வாழ்ந்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டு இறுதியில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது ''ராபின்சன் ஸ்ட்ரீட்'' என்ற தலைப்பில் பேசப்பட்ட அந்த வழக்கு பல சர்ச்சைகளை உருவாக்கியது என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மணிப்பூர் வன்முறை; வெளியான மாணவர்களின் சடலங்கள் புகைப்படம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

student photos of manipur issue

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.

 

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு கான்போபி மாவட்டத்தில் மர்ம  நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இதையடுத்து, அடுத்த நாளே சுராந்தபூர் மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொண்ட தாக்குதலில் துணைக் காவல் ஆய்வாளர் ஒருவர் பலியானார். இந்த நிலையில், கலவரம் காரணமாக கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்ட இணைய சேவை, சமீபத்தில் மீண்டும் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைthதளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.  இது தொடர்பாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மணிப்பூர் மாநில அரசு உறுதியளித்துள்ளது.

 

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த பின்னர் இரு மாணவர்களின் சடலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், ஜூலை மாதம் காணாமல் போன அந்த மாணவர்கள் ஹேம்ஜித் (20), மற்றும் லிந்தோய்ங்கம்பி (17) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநில மக்களின் விருப்பப்படி இந்த வழக்கு ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரண்டு மாணவர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்பு துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த கொடுங்குற்றம் செய்தவர்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு, பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.