Skip to main content

சுகாதாரமில்லாத சுகாதாரத்துறை அமைச்சர் 

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
mm


பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள்  சர்ச்சைகளில் சிக்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் மேடைகளில் ஏறி மற்ற தலைவர்களை சாடுவது அல்லது மற்ற மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவது போன்றவைகள் இதற்கு எடுத்துக்காட்டு. இதற்கு மற்ற அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவிப்பர். ஆனால் இந்த முறை ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்க முடியாத செயலை செய்துள்ளார்.

ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரான காளிச்சரண் சரப் தனது காரிலிருந்து இறங்கி சாலையோரம் சிறுநீர் கழித்துள்ளார் அப்பொழுது யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் தூய்மையாக வைத்திருக்கவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என்று  "ஸ்வச் பாரத் அபியான்" திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும் பா.ஜ.க அரசின் அமைச்சரே இவ்வாறு செய்துள்ளது கட்சிக்கு வேதனை அளித்துள்ளது.

இவ்வாறு நீங்கள் செய்துள்ளீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப "இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை" என்று  காளிச்சரண் எளிமையாக பதில் அளித்துள்ளார். இவர் இந்த காரியத்தை செய்ததற்கு ஆளும் அரசு வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக எம்பிக்கள் கூட்டம்... தேதியை அறிவித்தது திமுக!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

DMK MPs meeting ... DMK announces date!

 

ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகின்ற நிலையில் தற்போது திமுக எம்பிக்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இக்கூட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் எம்பிக்கள் கூட்டம், வருகிற 26ஆம் தேதி நடைபெறும். இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இந்த கூட்டம் எனக்கு திருப்தியில்லை... அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த எம்.பிக்கள்!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 23.11.2019 மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் தலைவர் மற்றும் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் திரு. சி. என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில், உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குழுவின் இணைத் தலைவர் மற்றும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர். எம். கே. விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு.பெ. கிரி (செங்கம்), கே. வி. சேகரன் (போளுர்) ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

I am not satisfied with this meeting ... MPs who pierced the officials with questions!

 

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் மத்திய அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்றபடி, திட்ட செயல்பாடுகள் குறித்தும் உரிய செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று 23.11.2019 மத்திய, மாநில அரசின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், மத்தியரசின் வேலை உறுதியளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கழிவறை திட்டம், குடிநீர் திட்டம், முதியோர் உதவித்தொகை போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கேள்விகளாக எழுப்பினர். இதற்கு சரியான பதில்களை சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினார்கள்.

வேளாண்மையை மட்டும்மே நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் செய்யப்படும் திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு சரியான முறையில் சொல்வதில்லை என்பதையும் எடுத்துச்சொன்னார்கள்.

 

I am not satisfied with this meeting ... MPs who pierced the officials with questions!

 

அதேபோல் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 8 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு பைபாஸ் சாலை அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. ஊரக சாலைகள் சரியாக அமைக்காதது போன்றவற்றையும் சுட்டிக்காட்டினர் மக்கள் பிரதிநிதிகள்.

அதோடு, திட்டங்கள் செய்துள்ளோம் என புள்ளிவிபரங்களை தந்துள்ளீர்கள், அது எங்கங்கு செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி அதுப்பற்றிய தகவல் எங்கே என கேட்டபோது, துறை அதிகாரிகள் தருகிறோம் எனச்சொன்னார்களே தவிர அதுப்பற்றி விளக்கமாக எதையும் சொல்லவில்லை. நீங்கள் எங்கங்கு என்னன்ன பணிகள் செய்துள்ளீர்கள் எனச்சொன்னால் தானே, நாங்கள் செய்துள்ளார்களா என ஆய்வு செய்ய முடியும் என்றார்கள்.

கூட்டம் பற்றி இறுதியாக பேசிய குழு தலைவர் எம்.பி அண்ணாதுரை, இந்த கூட்டம் எனக்கு முழு திருப்தியை தரவில்லை. 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். அடுத்த கூட்டம் நடைபெறும்போது துறைவாரியாக செய்துள்ள பணிகள் முழு விபரம் தேவை என்றார்.

இந்த கூட்டத்தில் மாநிலத்தை ஆளும் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யார் எம்.எல்.ஏ தூசி.மோகன், கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.