Skip to main content

படேல் சிலையை விட பிரதமர் மோடிக்கு உயரமான சிலை அமைக்க திட்டம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

There is a plan to build a statue of Modi taller than the Patel statue

 

சர்தார் வல்லபாய் படேலின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு படேலின் சிலை உருவாக்கப்பட்டது . சுமார் ரூ. 2900 கோடி செலவில் 182 மீட்டர் உயரத்தில் உலகின் உயர்ந்த சிலையாக கட்டப்பட்ட  இந்த சிலையை  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சிலை குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் சிலையின் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், உலகில் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமாக, பிரதமர் மோடிக்கு சிலை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. 

 

மஹாராஸ்டிரா மாநிலம் புனே அருகே லவாசா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த இடம் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாகவும் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனமான டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம்  சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக இங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 190 மீட்டர் முதல் 200 மீட்டர் அளவில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் சிலை திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாட்டு தூதர்களை அழைக்கவும் டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

There is a plan to build a statue of Modi taller than the Patel statue

 

இது குறித்து, டார்வின் பிளாட்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஹரிநாத் சிங் அளித்த பேட்டியில், “இந்திய  நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற பிரதமர் மோடி தன்னால் முடிந்த வரை அத்தனையும் செய்து வருகிறார். அதனால், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக உலகிலேயே மிகப்பெரிய சிலையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் தொலைநோக்கு செயல் திட்டம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடிக்கு லவாசாவில் அமைக்கப்படும் சிலை நாட்டின் அழிக்க முடியாத அடையாள சின்னமாக இருக்கும். இந்த சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேல் சிலையை விட உயரமானதாக, அதாவது 190 மீட்டர் முதல் 200 மீட்டர் வரையிலும் இருக்கும். இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறக்க முடிவு செய்துள்ளோம்.

 

இந்த சிலையை சுற்றி, பொழுதுபோக்கு மையம், நினைவுப் பூங்கா, இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சிக் கூடம் போன்றவற்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கண்காட்சி அரங்கில், பிரதமர் மோடி இதுவரை செய்த சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்க அவர் செய்த செயல்கள், மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆகியவை திரையிடப்படும்” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.