Skip to main content

நாட்டிற்காக 32 தோட்டாக்களை தாங்கியவரின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை - ராகுல் காந்தி வேதனை!

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

rahul gandhi

 

1971ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தானை போரில் வென்று, அந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்கத்தை, வங்கதேசம் என்ற தனிநாடாக உருவாக்கியது. இந்தப் போரில் இந்தியா வென்ற தினம், ஆண்டுதோறும் வெற்றி தினமாக (விஜய் திவாஸ்) அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், நேற்றோடு (16.12.2021) பாகிஸ்தானை இந்தியா போரில் வென்று 50 ஆண்டுகள் நிறைவடைந்தது.

 

இதனையொட்டி மத்திய அரசு சார்பில் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்தியா, பாகிஸ்தானைப் போரில் வென்றபோது பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலையொட்டி, நேற்று அம்மாநிலத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் சார்பில் 1971 போரில் பங்கேற்ற வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசும்போது, இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சிக்கவும் செய்தார். அந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது வருமாறு,

 

“எனது குடும்பத்துக்கும் உத்தரகாண்ட் மாநிலத்திற்குமான உறவு எனக்கு நினைவிருக்கிறது. என் பாட்டி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த அக்டோபர் 31ஆம் தேதி எனக்கு நினைவிருக்கிறது. என் தந்தை ராஜீவ் காந்தி இந்த நாட்டிற்காக தன்னைத் தியாகம் செய்த மே 21 எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் தியாகத்தின் உறவு இருக்கிறது. உத்தரகாண்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் செய்த தியாகத்தை எனது குடும்பமும் செய்துள்ளது. தனது இரத்தத்தை இழந்து இங்கு நிற்பவர்களால் அந்த தியாகத்தை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். இராணுவம், விமானப்படை அல்லது கடற்படையில் இருப்பவர்களால் இதை நன்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், தியாகம் செய்யாத குடும்பத்தினாலோ அல்லது நபராலோ அந்த தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

 

ஆப்கானிஸ்தானை வீழ்த்த அமெரிக்கா 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது. ஆனால் 13 நாட்களில் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடித்தது. 1971இல் என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒன்றுபட்டு ஒன்றாக நின்றது. சிலர் இராணுவம் போரை வென்றது என கூறுகின்றனர், சிலர் அரசியல் தலைமையினால் போரில் வெற்றிபெற்றதாகக் கூறுகின்றனர். கடற்படை மற்றும் விமானப்படையினரால் போரில் நாம் வெற்றிபெற்றதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு சாதியும், ஒவ்வொரு மதமும் ஒன்றுபட்டதால்தான் நாம் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 

 

அந்த வெற்றிக்கு மற்றொரு காரணம் பாகிஸ்தான் பிளவுபட்டிருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் பலவீனமாக இருந்தது. இது மிக முக்கியமான பாடம். இந்தியா ஒன்றாக நின்றபோது அமெரிக்காவின் 7வது கடற்படைபிரிவு திரும்பிச் சென்றது. நாம் ஒன்றிணைந்து பேசும்போது, இந்தியாவின் முன் எந்த சக்தியும் நிற்க முடியாது. இன்று நாடு பிளவுபடுத்தப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டுவருகிறது என்பது வேதனையான விஷயம்.  நாட்டுக்காக 32 தோட்டாக்களைத் தாங்கிய பெண்மணியின் பெயர் அழைப்பிதழில் கூட இல்லை. உண்மையைப் பார்த்து அரசு பயப்படுவதே இதற்குக் காரணம். இருப்பினும், இது என்னைக் கவலையடையச் செய்யவில்லை. ஏனென்றால் அவர் நாட்டிற்காக தனது இரத்தத்தை சிந்தினார் என்பதை நான் அறிவேன்.

 

இரண்டு அல்லது மூன்று தொழிலதிபர்களுக்காக அரசு செயல்படுகிறது, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை தொழிலதிபர்களின் ஆயுதங்கள். பிரதமர் நரேந்திர மோடி அதைச் செயல்படுத்தினார். டில்லியில் இருந்து பாஜக அரசு அகற்றப்படும்வரை, இந்த நாட்டில் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இந்தியா வலுவடைந்துகொண்டிருக்கிறது என்று நம்ப வேண்டாம். அவ்வாறான தவறான எண்ணங்களைக் கொண்டிருக்காதீர்கள். ஹெலிகாப்டர், விமானம் மற்றும் டாங்கிகள் நாட்டை வலிமையாக்காது. மக்கள் அதிகாரம் பெற்றால் மட்டுமே நாடு வலிமை பெறும்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார். 

Next Story

“ராகுல் காந்தி மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா?” - தேவகவுடா தாக்கு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Deva Gowda crictizes Rahul gandhi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “எனக்கு சாதியின் மீது ஆர்வம் இல்லை. நியாயத்தின் மீதுதான் ஆர்வம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதை சாதியை கணக்கெடுப்பது என்று நினைக்க வேண்டாம். அதில் பொருளாதார மற்றும் நிறுவனக் கணக்கெடுப்பையும் சேர்ப்போம். 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நிலைமை என்ன?, எந்தத் திசையில் இருக்க வேண்டும்? என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்துவோம். 

25 கோடீஸ்வரர்களுக்கு 16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடியாக பாஜக அரசு வழங்கிய ரூ.16 லட்சம் கோடியை 90% மக்களுக்கு வழங்குவதே எங்கள் தேர்தல் அறிக்கையின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது கேரண்டி. சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பொருளாதாரம் மற்றும் கல்வி குறித்தும் கணக்கெடுப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் தேவகவுடா தேர்தல் பரப்புரையில் மேற்கொண்டார். அப்போது அவர், “ராகுல் காந்தி சொத்துக் கணக்கெடுப்பு நடத்தி செல்வத்தை மறுபங்கீடு செய்ய விரும்புகிறார். அவர் ஒரு மாவோயிஸ்ட் தலைவர் என்று நினைக்கிறாரா? அவர் ஒரு புரட்சியைக் கனவு காண்கிறாரா?. சொத்து மறுபங்கீடு பற்றி பேசிய ராகுல் காந்தி, சந்தை சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து இந்த நாட்டின் செல்வத்தை உயர்த்திய இரண்டு காங்கிரஸ் பிரதமர்களை அவமதித்து அவமானப்படுத்தியுள்ளார். இரண்டு காங்கிரஸ் பிரதமர்களும் செய்ததெல்லாம் தவறு என்று மறைமுகமாக சொல்ல முயல்கிறார். மன்மோகன் சிங் அரசு பிறப்பித்த அரசாணையைக் கிழித்தெறிந்தது போல் அவர்களின் பொருளாதார சீர்திருத்தங்களைக் கிழித்தெறிந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.