Skip to main content

டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

Published on 15/08/2020 | Edited on 15/08/2020
Prime Minister Modi hoisted the national flag at the Red Fort in Delhi

 

இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடந்த சுந்தந்திரதின விழாவில் பாரத பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழா கரோனா  நடவடிக்கை காரணமாக எளிமையாக  கொண்டாடப்படுகிறது. முப்படை அணிவகுப்பு, பலதுறை சாதனை வாகன அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் இன்றி இந்த வருடம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.  300 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள். 4 அடுக்கு பாதுகாப்பு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக  முப்படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள், பாஜகவினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்  நான்காயிரம் பேர் சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். பாரத பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்