Skip to main content

டெல்லி போலீஸ் கமிஷனர் நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

Opposition parties condemn appointment of Delhi Police Commissioner

 

முன்னாள் சி.பி.ஐ. ஸ்பெஷல் டைரக்டர் ராகேஷ் அஸ்தானாவை டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

 

மத்திய புலனாய்வுத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குநராக இருந்தவர் ராகேஷ் அஸ்தானா ஐ.பி.எஸ். அப்போதைய சி.பி.ஐ.யின் இயக்குநர் அலோக் வர்மாவும் அஸ்தானாவும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதனால் மத்திய புலனாய்வுத்துறையின் நேர்மை மீது களங்கம் ஏற்பட்டது. அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது பிரதமர் மோடியின் அலுவலகம். இதனால் தேசிய அளவில் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தின.

 

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் மீண்டும் சி.பி.ஐ. இயக்குநராக நியமிக்கப்பட்டார் அலோக் வர்மா. இதனை ஜீரணிக்க முடியாத மத்திய அரசு, அந்த பொறுப்பிலிருந்து இடமாற்றம் செய்தது. இந்தநிலையில், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவை எல்லை பாதுகாப்புப் படையின் இயக்குனர் ஜெனரல் பதவியில் நியமித்தது உள்துறை அமைச்சகம். பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இது நடந்தது.

 

இந்தச் சூழலில், கடந்த 31-ந்தேதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகேஷ் அஸ்தானாவை, டெல்லியின் போலீஸ் கமிஷனராக நியமித்திருக்கிறது மோடி அரசு. இந்த நியமனத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ராகேஷ் அஸ்தானாவின் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.