Skip to main content

நேரு பண்டிட் அல்ல; சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

bjp mla

 

 

 

மாட்டு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடும் ஒருவர் எப்படி பண்டிட்டாக இருக்க முடியும் எனவே நேரு பண்டிட் அல்ல என பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹூஜா என்பவர்  அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் ஒருவர். இவர் அண்மையில் காங்கிரஸ் பற்றி பல குற்றச்சாட்டுகளை சர்ச்சையான வார்த்தைகளால் முன்வைத்தவர்.

 

பசு கொலை என்பது  மனித உயிரை பறிக்கும் தீவிரவாதத்திற்கு இணையானது. இரண்டு மூன்று மனிதனை கொல்வதை விட ஒரு பசுவை கொல்வது என்பது இந்துக்களின் மனதை ஒட்டுமொத்தமாக சாகடிக்கும் செயல் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல் இந்திராவுடன் ராகுல் கோவில்களுக்கு சென்று நிறைய போதனைகளை பெற்றார் என்ற கருத்துக்கு ''ராகுல் எப்போது எந்த கோவிலுக்கு சென்றார் அதுவும் இந்திராகாந்தியுடன் ? என  கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பினார்.

 

அதேபோல் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி பெரிய சர்ச்சை கருத்தை முன்வைத்தார். பாலியல் கொடுமைகளுக்கும் போதை பழக்கங்களுக்கும் பெயர் போனது  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அந்த பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் அந்த குற்றச்செயல்களுக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர்  என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

 

தற்போது நேருவுக்கு முன் பண்டிட் பட்டம் போடுவது சரியல்ல மாட்டு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடுபவர் பண்டிட்டாக இருக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை கிளம்பியுள்ளார். இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கண்டனத்தை பெற்றுவருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.