Skip to main content

என் நம்பிக்கையில் யாரும் தலையிடாதீர்கள்! - எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்த யோகி

Published on 19/10/2017 | Edited on 19/10/2017
என் நம்பிக்கையில் யாரும் தலையிடாதீர்கள்! - எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்த யோகி

தீபாவளியை எங்கு கொண்டாட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இதில் கருத்து சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை என உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினமான நேற்று உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு சென்று அங்குள்ள கோவில்களில் தரிசனம் மேற்கொண்டார். மேலும், அங்குள்ள சர்ச்சைக்குரிய பகுதியான ராம ஜென்ம பூமி என அழைக்கப்படும் பகுதிக்கும் சென்றார். இதனை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த யோகி, ‘இது என் தனிப்பட்ட விருப்பம். இதில் எதிர்க்கட்சியினர் தலையிட எந்தவித உரிமையும் கிடையாது. ஒரு முதல்வர் என்கிற அடிப்படையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளின் வளர்ச்சி குறித்தும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். மாநிலத்தில் அமைதியும் பாதுகாப்பு நிலவ வேண்டும் என்பதற்காக நான் கடவுளிடம் வேண்டிக்கொள்வதற்காக இங்கு வந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்