Skip to main content

கோழிக்குஞ்சு மற்றும் 10 ரூபாயுடன் சிறுவன்!!! குவியும் பாராட்டுகள்...

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

மிசோரம் சிறுவன் ஒரு கோழிக்குஞ்சோடும், பத்து ரூபாயுடனும் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து இருக்கும் அந்த பதிவில் மிசோரம், சாய்ராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன், தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துள்ளது, அதனை கவனிக்காத அந்த சிறுவன் சைக்கிளால் கோழிக்குஞ்சு மீது மோதிவிட்டான்.

 

அடிபட்ட கோழிக்குஞ்சை பார்த்து பதறிப்போன அந்த சிறுவன், உடனடியாக அதை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளான். தனது கையில் இருந்த சில 10 ரூபாய் நோட்டையும் எடுத்துச்சென்றுள்ளான், அந்தக் கோழிக்குஞ்சின் சிகிச்சைக்காக, மேலும் இதைவைத்துக்கொண்டு அந்த கோழிக்குஞ்சிற்கு சிகிச்சை அளியுங்கள் எனவும் கூறியுள்ளான். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ஆனால் ஏற்கனவே அந்த கோழிக்குஞ்சு இறந்துவிட்டது இதை அந்த சிறுவனின் பெற்றோர் அவனிடம் கூறியுள்ளனர். மேலும், “அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. மற்றவர்களை விட தனித்துவமாக இருக்கிறான்” என்று சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
 

அந்த சிறுவனின் இரக்க குணத்தை பல்வேறு மக்களும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர். அந்த பதிவை பதிவிட்டார், கடைசியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், இதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் சிரிப்பும், அழுகையும் வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்