Published on 31/08/2021 | Edited on 31/08/2021

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. குறிப்பாக தொடர்ந்து நான்கு நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 29, 836 பேருக்கு கரோனா உறுதியானது.
அதன்பின் நேற்று 19,622 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியானது. இதனால் கரோனா பாதிப்பு கேரளாவில் குறைவதாக கருதப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அம்மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 30,203 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 115 பேர் உயிர் இழந்துள்ளனர். கேரளாவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.