Skip to main content

கேரளா பேராரயர் மீதான பாலியல் வழக்கில் திருப்பம்.... 

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
franco

 

கேரளாவில் பேராயர் மீது கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததை எதிர்த்து கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டம் தொடரும் வேளையில் நேற்று பேராயருக்கு ஆதரவாக அவர் சார்ந்த சர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஐந்து கன்னியாஸ்திரிகள் உட்பட ஒன்பது பேர் அந்தப் பேராயருக்கு எதிராக சதி செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் ஒருவர்  பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கடந்த ஜூலை மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் 2014ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை அந்தப் பாதிரியார் தன் விருப்பமின்றி 13 முறை பாலியல் வன்புணர்வு செய்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எழுபத்தைந்து நாட்களைக் கடந்தும் நடவடிக்கையெதுவும் எடுக்கப்படவில்லையென்பதால் அவர் இந்தியாவுக்கான வேட்டிகன் தூதருக்கும் இந்திய கத்தோலிக்கப் பேராயர்களின் கூட்டமைப்பின் தலைவருக்கும் மேலும் கத்தோலிக்க அமைப்புகளைச் சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்களுக்கும் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார் அந்தக் கன்னியாஸ்திரி.
 

"தனது பண பலத்தால் நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார்" என்று குற்றம் சாட்டிய அவர், '5 கோடி கொடுக்கிறேன், என் மீதான புகாரை திரும்பப் பெற்றுவிடு' என்று பேரம் பேசுவதாகவும் பேராயர் ஃபிரான்கோ மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதில் சொன்ன பேராயர், தன் மீது எந்தக் குற்றமும் இல்லையென்றும் அந்தக் கன்னியாஸ்திரியின் தவறான நடவடிக்கைக்காக அவரைக் கண்டித்ததால் தனக்கெதிராக ஆள் சேர்த்துக்கொண்டு சதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
 

கேரள கன்னியாஸ்திரிகள் அமைப்பும் பேராயருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தது. இதனிடையே போலீஸ் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்த நீதிமன்றம், 'உடனடி கைது நடவடிக்கையை விட, இறுதித் தீர்ப்பே முக்கியம்' என்றும் கூறியது. இந்நிலையில் ஜலந்தர் 'மிஷனரீஸ் ஆஃப் ஜீசஸ்' சபை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறது. 
 

இந்நிலையில் கன்னியாஸ்திரிகளின் போராட்டம் தொடர, பேராயர் ஃபிரான்கோ பதவி விலகியுள்ளார். மேலும், விரைவில் விசாரணைக்காக கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெண்ணிடம் தோற்று போகிறோம் என்ற ஆணின் எண்ணமே இத்தகைய கொலைக்கு காரணம்...” - மருத்துவர் ஷாலினி

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
hjk

 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியில் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷாலினி அவர்களிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

இது ஒரு தடுக்கப்பட வேண்டிய சம்பவம், அதை பற்றிய அறச்சீற்றம் நமக்கு நிறைய இருக்கு. இது ஏன் ஏற்படுகின்றது, அதற்கு எது அடிப்படை காரணமாக இருக்கிறது, எவ்வாறு தடுப்பது போன்ற கோணங்களில் இந்த சம்பவத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இதை மேலோட்டமாக கடந்து செல்ல முடியாது, அவ்வாறு செல்லவும் கூடாது. இதை ஒரு பெண்ணாக, தாயாக இதை கண்டிக்கிறேன்.

 

ஆனால் உ.பி காவல்துறையை பொறுத்தவரையில் பெண்ணுக்கு காயங்கள் இருக்கிறதே தவிர இதை குறிப்பிட்டு பாலியல் பலாத்காரம் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்களே? 

 

ஒரு இடத்தில் அடிபடாமல், மற்ற இடத்தில் மட்டும் அடிப்பட்டிருந்தால் அதற்கு பெயர் அடிபடவில்லை என்பதா?  பாலியல் பலாத்காரம் என்பதால் நாம் ரியாக்ட் பண்ணவில்லை, ஒரு உயிர் போனதால் நாம் ரியாக்ட் செய்கிறோம். பாலியல் பலாத்காரம் செய்தார்களா என்பது சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய ஒன்று, ஆனால் இங்கே ஒரு உயிர் போய் விட்டது. எப்படி போனது, வன்முறையால் கொடுமையாக தாக்கப்பட்டு கொலை வரை சென்றுள்ளது.  கை, கால்களை கட்டி அடித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண்ணின் மீது ஏன் வன்மம் வருகிறது என்ற கேள்வி இயல்பாகவே நம்மிடம் எழுகிறது. இந்த நோயின் முதல் நாடி எங்கிருந்து வருகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அதை நாம் கண்டறிவது என்பது இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இதை நான் ஒரு சமூக நோய் என்று கூட புரிந்து கொள்கிறேன். ஆனால் தன்னுடைய ஆளுமையில் பிரச்சனை என்றால், ஓடிச்சென்று தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்வது என்பது அவனுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்க்க வேண்டும். இது உ.பி மாநிலத்தில் மட்டும் இல்லை, அனைத்து மாநிலத்திலும் இதே நிலைமை இருக்கிறது. 

 

நம்முடைய இந்திய ஆண்களுக்கு நாம் பெண்களிடம் உடலுறவு விஷயத்தில் தோற்று போகிறோம் என்ற மனநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவை தாண்டி ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஆண்களின் என்ன ஓட்டம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த தோல்வி மனப்பான்மை அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யுமளவுக்கு கொண்டு செல்கிறது. நம்மை இந்த உறவை வைத்து கட்டுப்படுத்துகிறார்களே என்ற எண்ணம் அவர்கள் மனதில் நெடுநாட்களாக இருந்து வருகிறது. அதனால்தான் தனி ஆளாக மட்டும் சென்று இந்த கொலைபாதக செயலை செய்யாமல், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இவர்களின் ஆழ்மனதில் இருக்கின்ற வன்மத்தின் வெளிப்பாடே இவர்களை இத்தகைய கொடுமைகளை செய்ய வைக்கிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. 

 

 

Next Story

பலாத்காரம் செய்ய வந்த திருடனிடம் கொரோனா இருப்பதாக பொய் கூறி தப்பித்த இளம்பெண்!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த திருடனிடம் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி பெண் ஒருவர் தப்பித்த சம்பவம் சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், சீனாவில் வூகான்நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரம் ஜிங்ஷான்.  அங்குள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடன் ஒருவன் கொள்ளையடிக்க முயன்றுள்ளான். கொள்ளை முயற்சியில் அவர் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டில் இளம் பெண் ஒருவர் இருப்பதை பார்த்துள்ளார். இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்புவதற்கு என் செய்வதென்று புரியாமல் யோசித்த அவர், திடீரென தனக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக கூறி கடுமையாக இருமி பொய் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவர் திருடுவதை கூட மறந்துவிட்டு வீட்டை விட்டு தெறித்து ஓடியுள்ளார்.