கடந்த செவ்வாயன்று கேரள சட்டசபையில் ஒரு சட்ட மசோதா திருத்தப்பட்டு நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவானது மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர், பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தலைமை விப்ளர் ஆகியோரின் சம்பளத்தை ஏப்ரல் 1 முதல் இரண்டு மடங்காக அதிகரிக்க கொண்டுவரப்பட்டதாகும்.
இதன்படி அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இப்போது 55,000 ரூபாயிலிருந்து 90,000 ரூபாயாக அதிகரிக்கும். எம்.எல்.ஏக்களின் சம்பளம் 39,500 ரூபாய் முதல் 70,000 வரை அதிகரிக்கிறது. அதுமட்டும்மல்லாமல் இந்தியாவிற்குள் எம்.எல்.ஏக்கள் விமானங்களில் சட்டமன்ற அமர்வுகள் மற்றும் குழு கூட்டங்களில் மட்டும் பங்குபெறுவதற்கான பயணத்திற்கு மட்டும் 50,000ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதா திருத்தத்தினால் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு அளிக்கப்படும் நிதியானது 12,000 ரூபாயிலிருந்து, மாதத்திற்கு 25,000 ரூபாயாகவும், அமைச்சர்களின் தொகுதிகளுக்கு 12,000 ரூபாயிலிருந்து 40,000 ஆயிரமாக அதிகரிக்கும். தொலைபேசி கட்டணம் 7,500லிருந்து 11,000ஆயிரமாக அதிகரித்துள்ளது. அலுவலகம் வாடகைக்கு 3000லிருந்து 8000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தில் ஆயிரம் ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றாற்போல் 35,000 முதல் 50,00வரை வழங்கப்படுகிறது. இந்த புதிய சட்டமசோதா திருத்தத்தால் அரசுக்கு கூடுதலாக 5.25கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலும் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு...
சார்ந்த செய்திகள்
Next Story
'இதையெல்லாம் வைத்து பணம் சம்பாரிக்கணுமா?' - மறுத்த அமைச்சர் மா.சு
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.
பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக 3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேரளா அரசு சடலங்களை விற்று வருவாய் ஈட்டியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், 'அடையாளம் தெரியாத சடலங்கள் குறிப்பிட்ட காலம் வரை மருத்துவக் கல்லூரி உடற்கூறு ஆய்வுக்கு பயன்படுத்துவது என்பது எல்லா இடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒன்று. அதிலும் கூட பணம் செய்ய வேண்டும் என்பதுதான் ஒரு கேள்விக்குறி. தமிழ்நாடு அரசு கொஞ்சம் யோசித்து தான் முடிவு எடுக்கும். அது தேவையா என்பது தான். அது நல்லது என்று சொல்ல முடியாது. அதை போய் உடற்கூறாய்வுக்கு விற்பது என்பதை ஏற்கவில்லை. இலவசமாக தரலாம் ஆனால் அதை பணமாக்க வேண்டும் என்பது நல்ல கருத்தாக தெரியவில்லை'' என்றார்.
Next Story
கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்
கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது.