Skip to main content

பாம்பை விட்டு மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள்... கேரள நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

jk

 

கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ். 27 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு உத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்தின்போது ருத்ராவிடம் 784 கிராம் தங்க நகைகள், கார் உள்ளிட்டவற்றை அவர் வரதட்சணையாக வாங்கியுள்ளார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அவருக்கு வேறொரு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், பாம்பை வைத்து மனைவியைக் கொன்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்று நினைத்தார். இதற்காக யூடியூப்பில் அதிக விஷம் கொண்ட பாம்பு எது என்று பல நாட்கள் பார்த்துள்ளார். அதில் ஒரு பாம்பை இறுதிசெய்த அவர், பாம்பு பிடிக்கும் நபரிடம் தனக்கு இதுபோல் ஒரு பாம்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். பாம்பு பிடிப்பவரும் அதே மாதிரியான பாம்பைப் பிடித்து அவரிடம் கொடுத்துள்ளார். அதை மனைவி வீட்டில் இருக்கும்போது அவருக்கு அருகில் தூக்கிப்போட்டுள்ளார். பாம்பு பின்புறமாக வந்து அவரின் காலை கடித்துள்ளது. 

 

இதில் நிலைகுலைந்த அவர் கத்தியுள்ளார். எப்படியும் மனைவி இறந்துவிடுவார் என்ற நம்பிக்கையில், அவரை மருத்துவமனைக்கு சூரஜ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 40 நாட்கள் இருந்த அவரின் மனைவி பிழைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சூரஜ், மீண்டும் ஒரு பாம்பை வாங்கி, மாமனார் வீட்டிற்குப் போயிருந்த மனைவியைக் கொல்ல, அங்கேயே சென்று பாம்பை அவர் தூங்கும்போது அவர் அருகில் வீசியுள்ளார். பாம்பு கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து மகளைப் பாம்பு கடித்ததால் சந்தேகமடைந்த ருத்ராவின் பெற்றோர், போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனை விசாரித்த அவர்கள், சூரஜ்தான் இந்த வேலைக்குக் காரணம் எனக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட அவரை,  நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு குற்றவாளி என்று உறுதிசெய்து தண்டனை விவரத்தை இன்று (13.10.2021) அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்புக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது.

 

fg

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.