Skip to main content

"தலைச்சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது"- வெங்கையா நாயுடு பெருமிதம்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீசத்திய சாய் நிறுவனத்தின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து பேசினார். இந்தியா மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். அது கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

vice president venkaiah naidu

 

 

அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க உறுதி செய்யும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது. சிறப்பான கல்வியை  அனைவருக்கும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் தேசிய கல்வி கொள்கையின் அறிக்கை உள்ளது . அந்த வரைவு அறிக்கை, தேசிய தேவை, நமது பண்பாடு, உலக அளவில் சிறப்பான மாணவர்களை உருவாக்க வேண்டிய தேவை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்கி இருக்கிறது. இதில் தாய் மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பன்மொழி உலகில் பிற மொழிகளில் உள்ள அறிவுத்திறமையை முன்னெடுப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா இன்று இளம் இந்தியாவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் பேரும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேரும் உள்ளனர்.

 

 

vice president venkaiah naidu

 

 

இதுவரை கிடைக்கப் பெறாத வாய்ப்புகளை இந்த கல்வி கொள்கை வழங்குகிறது. இது கல்வித்துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 21-வது நூற்றாண்டுக்கு தேவையான திறன், அறிவாற்றல், மனநிலையை ஏற்படுத்தும் வகையில் நமது கல்வி முறை சீரமைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார். நாட்டின் அனைத்து தரப்பினரும், இந்த கல்வி கொள்கையின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள் குறித்து அனைவரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும்.

 

vice president venkaiah naidu

 

நமது அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் சீர்திருத்தம் செய்வதால், நமது பொருளாதாரம் வலுவானதாகவும், எதையும் தாங்கக்கூடியதாகவும் மாறியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. தலைச்சிறந்த  நாடுகள் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நமது ஊக்கத்துடன் கூடிய வளர்ச்சியை மேலும் முடுக்கி விட வேண்டும். அதன் மீது மிக முக்கியமான கவனத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். இதில் நாம் தோல்வியடைவே கூடாது. நமது ஒட்டுமொத்த கல்வியை சீரமைப்பது குறித்து சிந்திக்க, புதிய விஷயங்களை கண்டுபிடிக்க இது சரியான தருணம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.