Published on 18/04/2022 | Edited on 18/04/2022

மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதிய முன்னுரை பெரும் சர்ச்சையான நிலையில், இளையராஜாவிற்கு ஆதரவாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளையராஜாவின் கருத்து ஒரு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் பிடிக்கவில்லை என்பதால் இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவருக்கு மாறுபட்ட பார்வை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள ஜே.பி.நட்டா, அதற்காக ஏன் அவரை இழிவுபடுத்தவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வன்முறை அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.