Skip to main content

இந்தியாவில் 8,356 பேருக்கு கரோனா!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

india coronavirus strength peoples union health ministry

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,529 லிருந்து 8,356 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242 லிருந்து 273 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 653 லிருந்து 716 ஆக அதிகரித்துள்ளது. 

 

j



அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,761, தமிழகத்தில் 969, டெல்லியில் 1,069, ராஜஸ்தானில் 700, மத்திய பிரதேசத்தில் 532, தெலங்கானாவில் 504, கேரளாவில் 364, ஆந்திராவில் 381, குஜராத்தில் 432, கர்நாடகாவில் 214 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்