Skip to main content

"துணிச்சல் இருந்தால் தலிபான்களுக்கு தடை விதிக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு அசாதுதீன் ஓவைசி சவால்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

owaisi

 

அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, தொடர்ந்து பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுவருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிட உள்ளது.

 

இதனையொட்டி அசாதுதீன் ஓவைசி, அண்மையில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்று தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார். இந்தநிலையில் நேற்று (14.09.2021) பீகாரின் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து பேசியுள்ளதோடு மத்திய அரசுக்குத் துணிச்சல் இருந்தால் தலிபான்களை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (உபா) சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளதாவது, “அரசுக்குத் துணிச்சல் இருந்தால், அது தலிபான்களை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் அட்டவணையில் சேர்க்க வேண்டும். தலிபான்களின் வளர்ச்சி இந்தியாவிற்கு கவலையளிக்கக்கூடியதாக மாறலாம் என்றும், அதேநேரத்தில் அது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நன்மை பயக்கலாம் என்றும் நான் 2013 முதல் கூறிவருகிறேன். ஆனால், பாரதிய ஜனதாவுக்கு, அனைத்து முஸ்லிம்களும் தலிபான்கள்தான். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இந்திய அரசு ஒரு மூலோபாய தவறை செய்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு மத அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கிறேன்.

 

உ.பி.யில் 100 இடங்களில் போட்டியிட தயாராக உள்ளோம். இதுவரை எந்த கூட்டணியும் ஏற்படவில்லை. எங்களால் தனியாகவும் போட்டியிட முடியும். நாங்கள் வேறு கட்சிக்கு உதவுவதாக எங்களை நோக்கி விரலை நீட்டுபவர்கள், மக்களவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடாதபோது என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும். பீகாரில், நாங்கள் 19 இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றோம். முஸ்லிம்கள் தங்களின் தகுதியான உரிமைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்களது தடத்தை விரிவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்லாமிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய அமித்ஷா; ஒவைசி கடும் எதிர்ப்பு

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

Owaisi strongly condemned Amit Shah who spoke about Islamic reservation

 

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அமித்ஷா பேசியதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெலுங்கானா சென்ற போது, அங்கு நடந்த கட்சி கூட்டத்தில், “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி ஒவைசியிடம் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும். சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை மோடியே வைத்து இருப்பார்.

 

முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய இருக்கையை தக்கவைப்பதில் கவனம் செலுத்தட்டும். ஒருபோதும் பிரதமர் மோடியை தெலுங்கானா மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. மத்திய அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடையாமல் சந்திரசேகர் ராவின் அரசு தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக பாஜக தெலுங்கானாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கப்படும்” என்றார். 

 

இது அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. அறிக்கையின் அடிப்படையில்தான் கொடுக்கப்படுகிறது. இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமிய வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். சீனாவுடன் எல்லை பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதைப்பற்றியெல்லாம் விவாதிக்காமல் அமித்ஷா இஸ்லாமியர்கள் சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.

 

 

Next Story

ஆப்கானிஸ்தானின் முதல் கார்; மேட் ஆஃப் தாலிபன்ஸ்

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

Afghanistan's first car; made by Taliban

 

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் அங்கு தங்களின் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களில் பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் பெண் பத்திரிகையாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இவ்வாறு தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கியது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது. 

 

தொடர்ந்து ஆப்கனில் தலிபான்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில், தற்பொழுது முதல்முறையாக தாலிபான்களின் உத்தரவின் பேரில் நவீன கார் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள 'ஆப்கானிஸ்தான் டெக்கினிக்கல் வெகேஷனல்' நிறுவனத்தில் 30 பேர் கொண்ட இன்ஜினியர் குழு இந்த காரை வடிவமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானால் தயாரிக்கப்பட்ட முதல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. காரை சுற்றி நின்று தலிபான்கள் பெருமை பேசிக்கொள்ளும் காட்சிகள், புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.