Skip to main content

தலிபான்கள் நல்லாட்சி தருவார்கள் என நம்பிக்கை - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

farooq abdullah

 

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, தனது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியை நிறுவியவருமான ஷேக் முகமது அப்துல்லாவின் 39வது நினைவு தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்றில் இன்று கலந்துகொண்டார்.

 

அப்போது பேசிய அவர், காஷ்மீரில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் அதில் பங்கேற்போம் எனவும், தேர்தலை நடத்துவதற்கு முன்பு மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்ப வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த  பரூக் அப்துல்லா, "தலிபான்கள் இஸ்லாமியக் கொள்கைகளைப் பின்பற்றி நல்லாட்சி வழங்குவார்கள் என்றும் மனித உரிமைகளை மதிப்பார்கள் எனவும் நம்புகிறேன். அனைத்து நாடுகளுடனும் நட்புறவை வளர்க்க அவர்கள் முயற்சிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்